பதிவு செய்த நாள்
16 ஆக2011
16:53
மும்பை: கடந்த 6 நாட்கள் வீழ்ச்சிக்குப்பின், எழுச்சியுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை, 109 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிந்துள்ளது. இன்று காலை 187 புள்ளிகள் அதிகரித்துடன், 17 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டி துவங்கிய மும்பை பங்குச்சந்தை மதியம் தள்ளாட ஆரம்பித்தது. சிறிய மற்றும் நடுத்தர பங்குகளின் விலை வீழ்ச்சியையடுத்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சரிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 108.69 புள்ளிகள் குறைந்து 16,730.94 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 37.15 புள்ளிகள் குறைந்து 5035.80 புள்ளிகளாகவும் இருந்தது. ஜூலை மாத பணவீக்க விகிதம் 9 சதவீதமாக இருப்பதால், பணவீக்கத்தைக் குறைக்க வட்டி வகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|