நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து 5 சதவீதம் உயர்வுநடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் துறைமுகங்களில் சரக்கு ... ... இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் ...
ஏற்ற, இறக்கத்தில் பங்கு வர்த்தகம்'சென்செக்ஸ்' 109 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2011
00:31

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. ஜப்பான் நீங்கலாக இதர ஆசிய சந்தைகளும் சரிவடைந்தன. மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம், தொடக்கத்தில் ஏறுமுகத்தில் இருந்தது. இந்நிலையில், நாட்டின் பணவீக்கம், சென்ற ஜூலை மாதம், 9.22 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியானது. எனினும், இது, எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடும் என்ற அச்சப்பாடு எழுந்தது. இதையடுத்து, பங்குகளின் விலை சரியத் தொடங்கியது.நேற்றைய பங்கு வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, வாகனம், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருள்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' வர்த்தகம் முடியும் போது, 108.69 புள்ளிகள் சரிவடைந்து 16,730.94 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,035.49 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,673.52 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் 'நிப்டி' குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 37.15 புள்ளிகள் குறைந்து, 5,035.80 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,132.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,015.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)