பதிவு செய்த நாள்
17 ஆக2011
00:31
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. ஜப்பான் நீங்கலாக இதர ஆசிய சந்தைகளும் சரிவடைந்தன. மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம், தொடக்கத்தில் ஏறுமுகத்தில் இருந்தது. இந்நிலையில், நாட்டின் பணவீக்கம், சென்ற ஜூலை மாதம், 9.22 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியானது. எனினும், இது, எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடும் என்ற அச்சப்பாடு எழுந்தது. இதையடுத்து, பங்குகளின் விலை சரியத் தொடங்கியது.நேற்றைய பங்கு வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, வாகனம், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருள்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' வர்த்தகம் முடியும் போது, 108.69 புள்ளிகள் சரிவடைந்து 16,730.94 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,035.49 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,673.52 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் 'நிப்டி' குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 37.15 புள்ளிகள் குறைந்து, 5,035.80 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,132.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,015.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|