இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் ... தகிக்கும் தங்கம் விலை தகிக்கும் தங்கம் விலை ...
சித்தூர் மாவட்டத்தில் தக்காளி விலை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2011
09:31

நகரி : ஆந்திராவில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் தக்காளி விற்பனை மந்தமாக உள்ளதால், 1 கிலோ தக்காளி விலை மொத்த விற்பனை மார்க்கெட்டில் வியாபாரிகள், முதல் தர தக்காளி 2 முதல் 3 ரூபாய்க்கும், பழுத்து அழுகும் நிலையில் உள்ள தக்காளி கிலோ 1 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்தனர். தக்காளிகளை விற்பனை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த விவசாயிகள், கிலோ தக்காளி 1 முதல் 3 ரூபாய்க்கு விற்க முன்வந்த போதிலும், மொத்த வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. இதனால், மன வேதனைக்குள்ளான தக்காளி பயிர் செய்த விவசாயிகள், மார்க்கெட் அருகில் சாலை ஓரத்தில் தக்காளியை, குவியல் குவியலாகக் கொட்டிவிட்டு வீடு திரும்பினர். தக்காளி விவசாயிகள் பரிதாபத்திற்குள்ளான இச்சம்பவம், ஆந்திராவில் சித்தூர் மாவட்டம், மதனபள்ளி மொத்த மார்க்கெட் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மதனபள்ளியைச் சுற்றியுள்ள கலிகிரி, பி.கொத்தகோட்டா, பீலேரு, மூலகலசெம்பு, குஞ்ஞம் கொண்டா, அங்கல்லூ, புங்கனூரு, பலமநேரு, கலகட போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி பயிர் செய்கின்றனர். இப்பகுதியில் இருந்து தினமும், 500 டன் தக்காளி மதனபள்ளி விற்பனை மார்க்கெட்டிற்கு வருகிறது. இங்கிருந்து தமிழகம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த மாநிலங்களில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து விட்டதால், மதனபள்ளி மார்க்கெட் வியாபாரிகள் தக்காளியை வாங்க முன்வரவில்லை. தற்போது ஐதராபாத் மற்றும் கடற்கரை மாவட்டங்களுக்கு மட்டுமே, இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், தக்காளியின் விலை மேலும் வீழ்ச்சியடைந்து விட்டதால், விலை கேட்பாரில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. தக்காளி விலை போகாத காரணத்தால், விவசாயிகள் மன வேதனையுடன், சாலை ஓரத்தில் கொட்டி விட்டுச் சென்ற தக்காளி குவியல்களை, இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாடுகளுக்கு உணவாக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்துடன், கூடை கூடையாக வாரிச் சென்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)