பதிவு செய்த நாள்
18 ஆக2011
00:04
சென்னை: மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம், விரிவாக்க திட்டங்களுக்காக, பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, 750 கோடி ரூபாயை திரட்டிக் கொள்ள உள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எல். உன்னி கிருஷ்ணன் கூறியதாவது: நிறுவனம், ஒவ்வொன்றும், 1,000 ரூபாய் முகமதிப்பு கொண்ட கடன் பத்திரங்களை வெளியிட்டு, 400 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது. கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வகையில், அதிக விண்ணப்பங்கள் வரும் நிலையில், கூடுதலாக, 350 கோடி ரூபாய் திரட்டவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. முதல் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு, 400 நாள்கள் முதிர்வு காலம் கொண்டது. இத்திட்டம் முடிவடையும் போது, முதலீடு செய்யப்பட்ட 1,000 ரூபாய், வட்டியுடன் 1,132.25 ரூபாயாக திரும்பக் கிடைக்கும். அதாவது இதற்கு 12 சதவீத ஆண்டு வட்டி கிடைக்கும்.இரண்டாவது திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, மூன்று பிரிவுகளின் கீழ், 12 சதவீதம் முதல் 12.56 சதவீதம் வரையில் வட்டி கிடைக்கும்.பல்வேறு நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கு, தரக்குறியீடுகளை வழங்கி வரும்,கேர் நிறுவனம், மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்களுக்கு 'கேர் ஏஏ-' என்ற குறீயீட்டை வழங்கியுள்ளது.இக்கடன் பத்திர வெளியீடு இன்று (18ம் தேதி) தொடங்கி, செப்., 5ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இவ்வாறு உன்னி கிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|