பதிவு செய்த நாள்
18 ஆக2011
00:05
புதுடில்லி: மத்திய அரசு 122.79 கோடி ரூபாய் மதிப்பிலான, 18 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு, அனுமதி வழங்கியுள்ளது.மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம், 18 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தும் 16 திட்டங்களை ஒத்தி வைத்தும் உள்ளது. 4 திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒரு திட்டத்திற்கான விண்ணப்பத்தை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக திருப்பி விட்டுள்ளது.எப்.ஐ.பி.பீ அமைப்பு அனுமதி அளித்துள்ள, நேரடி முதலீட்டு திட்டத்தில், பிபாவ் டிபன்ஸ் ஆப்÷ஷார் நிறுவனத்தில் 81.52 கோடி ரூபாயும், ஏர் ஒர்க்ஸ் இந்தியா இன்ஜினியரிங் நிறுவனத்தில், 17.77 கோடி ரூபாயும் அடங்கும். இவை தவிர, வால் டிஸ்னி மற்றும் டிஷ் டிவி இந்தியா ஆகிய நிறுவனங்களிலும், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வோடாபோன் - எஸ்ஸார் நிறுவனத்தில், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், 5.48 சதவீத பங்குகளை வாங்கும் வகையில், 2,700 கோடி ரூபாய் முதலீட்டிற்கான திட்டத்தை எப்.ஐ.பி.பீ அமைப்பு ஒத்தி போட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|