பதிவு செய்த நாள்
18 ஆக2011
00:07
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று ஓரளவிற்கு சூடுபிடித்து காணப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் பங்கு வியாபாரம், மந்தமாக இருந்தது. இந்நிலையில், நாட்டின் பல மாநிலங்களில், பருவ மழை நல்ல அளவில் பெய்து வருவதால், வேளாண் உற்பத்தி அதிகரித்து, பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இச்செய்தி சந்தைக்கு வலுவூட்டியது.புதன்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், நுகர் பொருட்கள், பொறியியல் போன்ற துறைகைளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், ரியல் எஸ்டேட், வங்கி, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 109.86 புள்ளிகள் அதிகரித்து, 16,840.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,000.38 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,708.98 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 20.80 புள்ளிகள் உயர்ந்து, 5,056.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,112.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,017.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|