'சென்செக்ஸ்' 110 புள்ளிகள் அதிகரிப்பு'சென்செக்ஸ்' 110 புள்ளிகள் அதிகரிப்பு ... ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு ...
மாநிலத்தில் 135 இடங்களில் '4ஜி' சேவை வசதி : பி.எஸ்.என்.எல்.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2011
09:14

சேலம் : ''தமிழகத்தில், பி.எஸ்.என்.எல்., சார்பில், '4 ஜி' (ஒய்-மக்ஸ்) கம்பியில்லா அகண்ட அலைவரிசை மூலம், 'பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என, தமிழக வட்ட பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் தெரிவித்தார். பி.எஸ்.என்.எல்., மூலம் '2ஜி', '3ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக, '4ஜி' கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சேலம், காரிப்பட்டி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் 4ஜி அகண்ட அலைவரிசை பிராட்பேண்ட் சேவையை, தமிழக வட்ட பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் துவக்கி வைத்தார். அஷ்ரப்கான் கூறியதாவது: தமிழகம் முழுவதும், 201 இடங்களில், '4ஜி' தொழில்நுட்பத்திலான அகண்ட அலைவரிசை, 'பிராட்பேண்ட்' சேவையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 22 இடங்களில், '4ஜி' சேவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது, 113 இடங்களில், '4ஜி' சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த '4ஜி' அகண்ட அலைவரிசை சேவையை, 15 கி.மீ., தொலைவுக்குள் பெற முடியும். '4ஜி' சேவை தங்குதடையின்றி வாடிக்கையாளர் பெறுவதற்கு ஏற்ப, மூன்று வகையான, 'ஆன்டனா'க்கள் பொருத்தப்படுகின்றன. இவ்வாறு அஷ்ரப்கான் கூறினார். 'தமிழகத்தில், 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச 'லேப்-டாப்' வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாணவ, மாணவியருக்கு 'பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்திக் கொடுக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் ஜெகதீசன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)