தொடர்ந்து சரிகிறது இந்திய பங்குச் சந்தைகள்தொடர்ந்து சரிகிறது இந்திய பங்குச் சந்தைகள் ... பண்டிகை சீசனில் பயமுறுத்தும் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.20680 பண்டிகை சீசனில் பயமுறுத்தும் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.20680 ...
திருச்சிக்கு காய்கறி வரத்து பாதிக்கும் அபாயம்:லாரி ஸ்டிரைக்; ரூ.20 கோடி வர்த்தகம் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2011
10:29

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துவங்கியுள்ள லாரி ஸ்டிரைக்கால் திருச்சி காந்திமார்க்கெட் வரவேண்டிய காய்கறிகள் இன்று முதல் வரமுடியாது என்பதால், காய்கறிக்கு தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படம் சூழல் உருவாகியுள்ளது. தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று இரவு முதல் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதனால் நேற்று காலை முதல் லாரிகள் ஓடவில்லை. திருச்சி மாவட்டத்திலிருந்து தினமும் 3,000 லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. ஸ்டிரைக்கால் நேற்று முன்தினம் முதலே திருச்சியின் பல இடங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டது. நேற்று காலை முதல் அனைத்து லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. திருச்சிக்கு வெளியூர்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் 300 லாரிகளில் மளிகைப் பொருட்களும், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகளும் கொண்டு வரப்படும். நேற்று அதிகாலை பெரும்பாலான லாரிகள் சரக்குகளுடன் காந்திமார்க்கெட்டுக்கு வந்தது. அதன்பின் ஸ்டிரைக்கில் பங்கேற்பதால் லாரிகள் போக்குவரத்து அப்படியே நிறுத்தப்பட்டது. இதனால் இன்று காலை திருச்சி காந்திமார்க்கெட் வரவேண்டிய காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவை, வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இம்முறை கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை லாரி ஸ்டிரைக் நடக்கும் என்று உரிமையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டால், ஸ்டிரைக் பல நாட்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது. ஆகையால், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஸ்டிரைக்கால் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் நேற்றும், இன்று அதிகாலையும் திருச்சி வந்த லாரிகள் அனைத்தும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த லாரிகளின் டிரைவர்கள் லாரிகள் நிறுத்தப்பட்ட இடங்களிலேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வரும் லாரிகளின் சரக்கை இறக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலையின்றி சிரமப்படும் சூழ்நிலையும், லாரிகள் ஸ்டிரைக்கால் உருவாகியுள்ளது. லாரிகள் ஸ்டிரைக்கால் ஒருநாளைக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.''மக்களின் அத்தியாவசியமான குடிநீர் மற்றும் பால் வண்டிகள் மட்டும் வழக்கம்போல் ஓடும்,'' என்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)