பதிவு செய்த நாள்
19 ஆக2011
10:29
திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துவங்கியுள்ள லாரி ஸ்டிரைக்கால் திருச்சி காந்திமார்க்கெட் வரவேண்டிய காய்கறிகள் இன்று முதல் வரமுடியாது என்பதால், காய்கறிக்கு தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படம் சூழல் உருவாகியுள்ளது. தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று இரவு முதல் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதனால் நேற்று காலை முதல் லாரிகள் ஓடவில்லை. திருச்சி மாவட்டத்திலிருந்து தினமும் 3,000 லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. ஸ்டிரைக்கால் நேற்று முன்தினம் முதலே திருச்சியின் பல இடங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டது. நேற்று காலை முதல் அனைத்து லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. திருச்சிக்கு வெளியூர்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் 300 லாரிகளில் மளிகைப் பொருட்களும், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகளும் கொண்டு வரப்படும். நேற்று அதிகாலை பெரும்பாலான லாரிகள் சரக்குகளுடன் காந்திமார்க்கெட்டுக்கு வந்தது. அதன்பின் ஸ்டிரைக்கில் பங்கேற்பதால் லாரிகள் போக்குவரத்து அப்படியே நிறுத்தப்பட்டது. இதனால் இன்று காலை திருச்சி காந்திமார்க்கெட் வரவேண்டிய காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவை, வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இம்முறை கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை லாரி ஸ்டிரைக் நடக்கும் என்று உரிமையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டால், ஸ்டிரைக் பல நாட்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது. ஆகையால், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஸ்டிரைக்கால் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் நேற்றும், இன்று அதிகாலையும் திருச்சி வந்த லாரிகள் அனைத்தும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த லாரிகளின் டிரைவர்கள் லாரிகள் நிறுத்தப்பட்ட இடங்களிலேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வரும் லாரிகளின் சரக்கை இறக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலையின்றி சிரமப்படும் சூழ்நிலையும், லாரிகள் ஸ்டிரைக்கால் உருவாகியுள்ளது. லாரிகள் ஸ்டிரைக்கால் ஒருநாளைக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.''மக்களின் அத்தியாவசியமான குடிநீர் மற்றும் பால் வண்டிகள் மட்டும் வழக்கம்போல் ஓடும்,'' என்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|