பதிவு செய்த நாள்
21 ஆக2011
03:36
புதுடில்லி:நடப்பாண்டு ஜூலை மாதத்தில், நாட்டின் காபி ஏற்றுமதி, 28 ஆயிரத்து 116 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 29 சதவீதம் (27 ஆயிரத்து 767 டன்) சதவீதம் அதிகமாகும் என காபி வாரியம் தெரிவித்துள்ளது. சென்ற ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட காபி ஏற்றுமதியின் மதிப்பு, 366 கோடி ரூபாய் ஆகும். இதே மாதத்தில், ஏற்றுமதிக்கான ஒரு டன் காபியின் விலை, ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 185 ரூபாயாக இருந்தது.கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன்ஒப்பிடும் போது, ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றாலும், மாத அடிப்படையில் ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதத்தில், 40 ஆயிரத்து 202 டன் காபி ஏற்றுமதியாகியிருந்தது. ஆனால் ஜூன் மாதத்தில் 30 சதவீதம் குறைந்து, 28 ஆயிரத்து 116 டன்னாக சரிவடைந்துள்ளது. நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாத காலத்தில் காபி ஏற்றுமதி, கடந்தாண்டின் இதே காலத்தை விட 43 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து 27 ஆயிரத்து 160 டன்னிலிருந்து, 1 லட்சத்து 81 ஆயிரத்து 308 டன் னாக அதிகரித்துள்ளது. நம் நாட்டிலிருந்து, இத்தாலி, ஸ்பெயின்மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு நாடுகளுக்கு அதிகளவில் காபி ஏற்றுமதியாகிறது என, காபி வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|