பதிவு செய்த நாள்
21 ஆக2011
03:38
அமெரிக்காவின் பொருளாதாரம் எதிர்பார்ப்பையும் விஞ்சி, மிகவும் மோசமாக இருக்கும் என்ற அச்சப்பாடு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நிலவி வரும் நெருக்கடியால், உலகப் பங்கு வர்த்தகம் மிகவும் ஆட்டம் கண்டுள்ளது.ஒவ்வொரு நாளும், 200- 300 புள்ளிகள் என்ற அளவில், சரிவடைந்து வருகிறது. பல முதலீட்டாளர்களுக்கு, தூக்கம் இல்லாத இரவுகள் தான். உலகளவில், பங்குச் சந்தைகள் இயக்கப்படுகின்றனவா அல்லது அதுவாகவே இயங்குகிறதா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. நடப்பு வாரத்திலும், பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாகவே இருந்தது. வெள்ளியன்று, இறுதியாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 328 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,141 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 98 புள்ளிகள்சரிவடைந்து, 4,845 புள்ளிகளிலும் நிலை கொண்டன. ஆக, ஒரு வார காலத்தில் 'சென்செக்ஸ்' 623 புள்ளிகளை இழந்துள்ளது. பல நிறுவனங்களின் பங்குகள், எதிர்பார்க்காத அளவிற்கு, மிகவும் குறைந்து போயுள்ளன. அடிப்படையில், இவை சிறந்த நிறுவனங்களாக இருந்தாலும், உலக ஆட்டத்தால், இந்நிறுவனங்களின் பங்குகளும், அதிகமாகவே ஆட்டம் கண்டுசரிவடைந்துள்ளன.ஏப்ரல் - ஆகஸ்ட்: நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், 'சென்செக்ஸ்' 20,000 புள்ளிகளை தாண்டி விடும் என்ற நிலைப்பாடு இருந்தது. ஆனால், தற்போது, 16,000 புள்ளிகளுக்கும் கீழ் வந்து நிற்கிறது. புதிதாக, பங்குச் சந்தைகளில் நுழைந்துள்ளவர்களுக்கு, இது ஒரு சிரமமான காலம் தான். அதே சமயம், நீண்ட நாட்களாக சந்தையில் இருப்பவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில், கடந்த 2008ம் ஆண்டில், அமெரிக்க வீட்டு வசதிகடன் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டது. அப்போதும், உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அந்த ஆண்டில், 'சென்செக்ஸ்' 8,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது. இதை, பல நாட்களாக பங்குச் சந்தையில் இருப்பவர்கள்உணர்ந்திருப்பர். ஆதலால், அவர்களுக்கு தற்போதைய பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நிலை, அதிக பயத்தை ஏற்படுத்தியிருக்காது. காலாண்டு முடிவுகள்: பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாகவே வந்துள்ளது. ஆனால், 'ஆடிக்காத்தில், அம்மியும் பறக்கும்' என்பார்கள். அது போன்று தற்போது, நன்கு செயல்படும் பல நிறுவனப் பங்குகளின் விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது. காலாண்டு முடிவுகளை வைத்து முன்னேறும் நிலையில், தற்போது சந்தை இல்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்: இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி.,) அமெரிக்காவையும், ஐரோப் பிய நாடுகளையுமே அதிகம் சார்ந்துள்ளன. இருப்பினும், 2008ம் ஆண்டிற்கு பின், இந்த சார்ந்திருக்கும் நிலை குறைந் துள்ளது. என்றாலும், சர்வதேச அளவில், பொருளாதார சுணக்க நிலை, கடுமையாகி வருகிறது. அந்நாடுகள் செலவு களைகட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலை எழும்போது, முதலில் அதிக பாதிப்பிற்குள்ளாவது ஐ.டி., துறை நிறுவனங்கள் தான். இதனால் தான், இத்துறை நிறுவனப் பங்குகளின் விலை, கடுமையாக சரிவடைகின்றன. கடந்த 20 மாதங் களில், தற்போது தான், இத்துறை நிறுவனப் பங்குகளின் விலை இந்த அளவிற்கு வீழ்ந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப துறை மாணவர்கள்: ஐ.டி., துறையைச் சேர்ந்த மாணவர்கள், கடமைக்காக படிக்காமல், திறமைகளை அதிகளவில் வளர்த்துக் கொள்ளும் வகையில் ஈடுபாடு காட்ட வேண்டும். போட்டிகள் அதிகமாக இருக்கப் போவதாலும், வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கப்போவதாலும், மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது, காலத்தின்கட்டாயமாகும். கச்சா எண்ணெய்: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.இதனால், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து வருகிறது.கவனித்து, முதலீடு செய்வது அவசியம். தங்கம், வெள்ளியில் முதலீடு: உலகளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருவதால்,சர்வதேச அளவில் ஜொலித்து வருகிறது.ஆனால், தற்போது, வாங்கலாமா என்று கேட்டால், சிறிய அளவில் தங்கம் வாங்கலாம். ஏனெனில் தங்கத்தின் விலை இன்னும், மேலே போவதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது. இந்தியாவில் பண்டிகைக் காலங்கள் நெருங்கி வருகிறது. இந்நிலையில், உலக நிலைமைகளால், இதன் விலை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், நீண்ட கால அடிப்படையில், சிறிது குறைய வாய்ப்புள்ளது. மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான அளவில் பார்க்கும் போது இதன் விலை குறைய வாய்ப்பில்லை.மேலும், புதிய உச்சங்களை தொடக்கூடும். வரும் வாரம் எப்படிஇருக்கும்? இது, பொறுமை காக்க வேண்டிய நேரமாகும். சந்தை மேலே செல்லும் போது, ஓடோடிச் சென்று பங்குகளை வாங்குவதும் சந்தை குறையும் போது, வாங்கிய பங்குகளை வந்த விலைக்கு விற்று விடுவோம் என்பதும், பல புதிய முதலீட்டாளர்கள் செய்யக் கூடியதாக உள்ளது.நீண்ட காலமாக பங்குச்சந்தையில் இருக்கும் சிலமுதலீட்டாளர்களும் இதே கொள்கையை தான் பின்பற்றுகின்றனர். பங்கு வர்த்தகம் கீழே செல்வதற்கான அறிகுறிகள் தான் தென்படுகின்றன. எனவே, ஒட்டு மொத்தமாக பார்க்கையில், இது, பொறுமை காக்கும் நேரம். சேதுராமன் சாத்தப்பன்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|