பதிவு செய்த நாள்
21 ஆக2011
11:34
புதுடில்லி : உப்பு முதல் சாஃப்ட்வேர் வரை தடம் பதித்துள்ள டாடா குழுமம் ஜூலை மாதத்தில் சந்தையில் இழந்த மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகும். உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி உள்ளது. ஜூலை 01ம் தேதி முதல் துவங்கி உள்ள நடப்பு காலாண்டில் இதுவரை உலக சந்தைகள் 200 பில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்துள்ளன. இதில் டாடா குழுமத்தின் இழப்பு மதிப்பு 10 சதவீதமாகும். டாடா குழுமத்தை தொடர்ந்து இரு அம்பானி குழுமங்களும் 15 பில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்துள்ளன. இதில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 9.89 பில்லியன் டாலர்களையும், அனில் அம்பானி தலைமையிலான குழுமம் 5 பில்லியன் டாலர்களையும் இழந்துள்ளன. இதே போன்று ஐசிஐசிஐ, இன்ஃபோசிஸ், விப்ரோ, ஜின்டல் குழுமம் உள்ளிட்டவைகளும் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அதே சமயம் பிர்லா, மகேந்திரா, பஜாஜ், ஹச்.டி.எஃப்.சி., எல் அன் டி உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்த அளவு இழப்பை சந்தித்துள்ளன. இந்த காலாண்டின் துவக்கத்தில் இந்திய சந்தைகள் இழந்த மொத்த தொகை 1.53 ட்ரில்லியன் டாலர்கள்(ரூ.67,31,000 கோடி) ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|