பதிவு செய்த நாள்
23 ஆக2011
00:21
புதுடில்லி: நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற ஜூலையில் 187 சதவீதம் வளர்ச்சி கண்டு 820 கோடி டாலராக (36 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டு ஜூலையில், 288 கோடி டாலராக (12 ஆயிரத்து 960 கோடி ரூபாய்) இருந்தது.'அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கு இந்திய பொறியியல் சாதனங்களுக்கான தேவை குறைந்துள்ளது. அதே சமயம், பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோ, கொலம்பியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், இந்திய பொறியியல் சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.இதனால், பாரம்பரிய சந்தைகளை மட்டுமே சார்ந்திராமல், புதிய சந்தை வாய்ப்புகளையும் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்' என பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு குழுவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நடப்பு 2010 - 11ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 114.3 சதவீதம் அதிகரித்து, 1,474 கோடி டாலர் (66 ஆயிரத்து 330 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்து, 3,160 கோடி டாலராக (1 லட்சத்து 42 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.சென்ற 2010 - 11ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 37.5 சதவீதம் வளர்ச்சி கண்டு 24,599 கோடி டாலராக (11 லட்சத்து 6 ஆயிரத்து 955 கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது. இதை, வரும் 2010 - 14ம் ஆண்டில் 50,000 கோடி டாலராக ( 22லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்த்த மத்திய அர” இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|