பதிவு செய்த நாள்
23 ஆக2011
00:23
கோல்கட்டா: இந்தியாவில், முன்னணியில் உள்ள பீ.பி.ஓ துறை நிறுவனங்கள், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 32 ஆயிரத்து 246 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டு வருவாயுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும்.பணிகளை வெளியில் இருந்து நிறைவேற்றி தரும் வர்த்தகத்திற்கு,பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் (பீ.பி.ஓ.) என்று பெயர் . இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், ஜென்பாக்ட் நிறுவனம்,சென்ற நிதியாண்டில் 5,680 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது.இது 24 சதவீத வளர்ச்சியாகும். இதைத்தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் டி.சி.எஸ் நிறுவனம் உள்ளது. இதன் வருவாய் 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,928 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, டேட்டா குவெஸ்ட் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனங்களையடுத்து மூன்றாம் இடத்தில், எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ஏஜிஸ் பீ.பி.ஓ நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய், 28 சதவீதம் உயர்ந்து, 2,352 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்நிறுவனம் இந்தியாவில், சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி 20 நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.அடுத்த இடங்களில், விப்ரோ (2,249 கோடி ரூபாய்), பர்ஸ்ட் சோர்ஸ் (1,833கோடி ரூபாய்), டபிள்யூ. என்.எஸ். குளோபல் சொல்யூஷன் (1,685 கோடி ரூபாய்), இன்போசிஸ் (1,545 கோடி ரூபாய்), ஆதித்ய பிர்லா மினாக்ஸ்(1,518 கோடி ரூபாய்), அக்சென்சர் இந்தியா (1,436 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஐ.பீ.எம் குளோபல் பிராசஸ் சர்வீசஸ் நிறுவனம், 1,292 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி 10வது இடத்தில் உள்ளது.சிறப்பான முறையில் இயங்கிவரும் முன்னணி 20 பீ.பி.ஓ நிறுவனங்களின் வாயிலாக, வேலை வாய்ப்பு பெற்றுள்ளோர் எண்ணிக்கை, 3,11,167 ஆகஅதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|