பீ.பி.ஓ. நிறுவனங்களின் வருவாய் ரூ.32,246 கோடிபீ.பி.ஓ. நிறுவனங்களின் வருவாய் ரூ.32,246 கோடி ... சென்னை - நந்தம்பாக்கத்தில் தைவான் நாட்டு கண்காட்சிநந்தம்பாக்கத்தில் சென்னை - நந்தம்பாக்கத்தில் தைவான் நாட்டு கண்காட்சிநந்தம்பாக்கத்தில் ...
முத்தூட் பைனான்ஸ் ரூ.1,000 கோடிக்கு கடன் பத்திர வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2011
00:24

சென்னை: தங்க அடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், வங்கி சாரா நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ், அதன் விரிவாக்க திட்டங்களுக்காக, பங்கு களாக மாறாத, கடன் பத்திரங்களை வெளியிட்டு, 1,000 கோடி ரூபாய் திரட்ட உள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பிஜிமோன் கூறியதாவது: நிறுவனம், ஒவ்வொன்றும், 1,000 ரூபாய் முகமதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டு, 1,000 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள உள்ளது. இக்கடன் பத்திரங்கள், மூன்று முதலீட்டு திட்டங்களை கொண்டுள்ளன. முதல் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு, மூன்று பிரிவுகளின் கீழ், 11.75 -12 சதவீதம் வட்டி கிடைக்கும். இத்திட்டத்தின் முதிர்வு காலம், 24 மாதங்களாகும். இரண்டாவது மற்றும் மூன்றாவது திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, மூன்று பிரிவுகளின் கீழ், 12 - 12.25 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இத்திட்டங்களின் முதிர்வு காலம் முறையே, 36 மற்றும் 60 மாதங்களாகும்.மேற்கண்ட திட்டங்களின் குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாயாகும். நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கு, தரக்குறியீடுகளை வழங்கி வரும்,கேர் மற்றும் இக்ரா ஆகிய நிறுவனங்கள், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்களுக்கு, 'ஏஏ-(ஸ்டேபில்)' என்ற தரக் குறியீட்டை வழங்கியுள்ளன.இக்கடன் பத்திர வெளியீடு, 23ம் தேதி (இன்று) தொடங்கி, செப்., 5ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மேலும், இக்கடன் பத்திரங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவுள்ளன. இவ்வாறு பிஜிமோன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)