பதிவு செய்த நாள்
23 ஆக2011
00:24
சென்னை: தங்க அடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், வங்கி சாரா நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ், அதன் விரிவாக்க திட்டங்களுக்காக, பங்கு களாக மாறாத, கடன் பத்திரங்களை வெளியிட்டு, 1,000 கோடி ரூபாய் திரட்ட உள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பிஜிமோன் கூறியதாவது: நிறுவனம், ஒவ்வொன்றும், 1,000 ரூபாய் முகமதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டு, 1,000 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள உள்ளது. இக்கடன் பத்திரங்கள், மூன்று முதலீட்டு திட்டங்களை கொண்டுள்ளன. முதல் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு, மூன்று பிரிவுகளின் கீழ், 11.75 -12 சதவீதம் வட்டி கிடைக்கும். இத்திட்டத்தின் முதிர்வு காலம், 24 மாதங்களாகும். இரண்டாவது மற்றும் மூன்றாவது திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, மூன்று பிரிவுகளின் கீழ், 12 - 12.25 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இத்திட்டங்களின் முதிர்வு காலம் முறையே, 36 மற்றும் 60 மாதங்களாகும்.மேற்கண்ட திட்டங்களின் குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாயாகும். நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கு, தரக்குறியீடுகளை வழங்கி வரும்,கேர் மற்றும் இக்ரா ஆகிய நிறுவனங்கள், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்களுக்கு, 'ஏஏ-(ஸ்டேபில்)' என்ற தரக் குறியீட்டை வழங்கியுள்ளன.இக்கடன் பத்திர வெளியீடு, 23ம் தேதி (இன்று) தொடங்கி, செப்., 5ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மேலும், இக்கடன் பத்திரங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவுள்ளன. இவ்வாறு பிஜிமோன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|