எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் பண்டு புதிய தங்க முதலீட்டு திட்டம்எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் பண்டு புதிய தங்க முதலீட்டு திட்டம் ... பயிரிடும் பரப்பளவு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு பயிரிடும் பரப்பளவு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு ...
ஏப்ரல்- ஜூலை மாதங்களில் முன்பேர சந்தைகளில் ரூ.53 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2011
00:27

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், இந்திய முன்பேர வர்த்தக சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 53 லட்சத்து 11 ஆயிரத்து 356 கோடி ரூபாயாகஅதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட, 57.5 சதவீதம் (33 லட்சத்து 72 ஆயிரத்து 249 கோடி ரூபாய்) அதிகமாகும் என, முன்பேர வர்த்தக சந்தைகளுக்கான பார்வர்டு மார்கெட்ஸ்கமிஷன் (எப்.எம்.சி) தெரிவித்துள்ளது.கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், தங்கம், வெள்ளி, கொண்டைக் கடலை, கொத்தவரைமற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றின் மீதானவர்த்தகம் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், இதே காலத்தில், 15 லட்சத்து 19 ஆயிரத்து 559 லிருந்து, 30 லட்சத்து 57 ஆயிரத்து 508 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வேளாண் விளை பொருள்கள் மீதான வர்த்தகம் 56.43 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3 லட்சத்து 77 ஆயிரத்து 99 கோடியிலிருந்து, 5 லட்சத்து 89 ஆயிரத்து 893 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.எரிசக்தி மீதான வர்த்தகம், 31.32 சதவீதம் அதிகரித்து,6 லட்சத்து 28 ஆயிரத்து 568 கோடியிலிருந்து, 8 லட்சத்து 25 ஆயிரத்து 432 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேசமயம், தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 8 லட்சத்து 47 ஆயிரத்து 9 கோடியிலிருந்து,8 லட்சத்து 38 ஆயிரத்து 520 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.தற்போது, நாட்டில் தேசிய அளவில், 5 முன்பேர வர்த்தக சந்தைகளும், மாநில அளவில், 18 சந்தைகளும் உள்ளன. இவை அனைத்திலுமாக, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 119.48 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)