பதிவு செய்த நாள்
23 ஆக2011
00:27
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், இந்திய முன்பேர வர்த்தக சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 53 லட்சத்து 11 ஆயிரத்து 356 கோடி ரூபாயாகஅதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட, 57.5 சதவீதம் (33 லட்சத்து 72 ஆயிரத்து 249 கோடி ரூபாய்) அதிகமாகும் என, முன்பேர வர்த்தக சந்தைகளுக்கான பார்வர்டு மார்கெட்ஸ்கமிஷன் (எப்.எம்.சி) தெரிவித்துள்ளது.கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், தங்கம், வெள்ளி, கொண்டைக் கடலை, கொத்தவரைமற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றின் மீதானவர்த்தகம் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், இதே காலத்தில், 15 லட்சத்து 19 ஆயிரத்து 559 லிருந்து, 30 லட்சத்து 57 ஆயிரத்து 508 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வேளாண் விளை பொருள்கள் மீதான வர்த்தகம் 56.43 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3 லட்சத்து 77 ஆயிரத்து 99 கோடியிலிருந்து, 5 லட்சத்து 89 ஆயிரத்து 893 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.எரிசக்தி மீதான வர்த்தகம், 31.32 சதவீதம் அதிகரித்து,6 லட்சத்து 28 ஆயிரத்து 568 கோடியிலிருந்து, 8 லட்சத்து 25 ஆயிரத்து 432 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேசமயம், தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 8 லட்சத்து 47 ஆயிரத்து 9 கோடியிலிருந்து,8 லட்சத்து 38 ஆயிரத்து 520 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.தற்போது, நாட்டில் தேசிய அளவில், 5 முன்பேர வர்த்தக சந்தைகளும், மாநில அளவில், 18 சந்தைகளும் உள்ளன. இவை அனைத்திலுமாக, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 119.48 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|