இந்திய தயாரிப்பு கார்களை வெறுக்கும் அமெரிக்கர்கள்இந்திய தயாரிப்பு கார்களை வெறுக்கும் அமெரிக்கர்கள் ... மகேந்திராவின் புதிய ரக ஸ்கார்பியோ கார் அறிமுகம் மகேந்திராவின் புதிய ரக ஸ்கார்பியோ கார் அறிமுகம் ...
ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வு : தங்க நாணய விற்பனை திடீர் நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2011
12:57

சென்னை : சர்வதேச சந்தையில் தங்கத்துக்கு தொடர்ந்து மவுசு அதிகரித்து வருவதால், விலையில் தினம் ஒரு மாற்றத்தை சந்தித்து வருகிறது. தொடர்ந்து ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக் கடைகளில் தங்க நாணயத்தின் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தங்கம் விலை, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சில மாதங்களாக, நிமிடத்துக்கு நிமிடம் தங்கம் விலையில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நேற்று, சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 2,661 ஆகவும், ஒரு சவரன் 21 ஆயிரத்து 228 ரூபாயாகவும் இருந்தது. மாலையில் மார்க்கெட் முடிவடையும் நிலையில் கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டு, கிராம் 2,631 ரூபாய்க்கும், சவரன் 21 ஆயிரத்து 048 ரூபாய்க்கும் விற்றது. இந்திய ரூபாய்க்கு இணையான அமெரிக்க டாலரின் மதிப்பு, 45.01 ஆக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் தங்கத்தின் அளவில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தைக்கு விற்பனைக்கு வரும் தங்கத்தின் அளவு, 35 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரிய தங்க மார்க்கெட்டுகளான சென்னை, கோவை நகரங்களில் தங்க நாணயங்களை விற்பனை செய்து வந்த டீலர்கள், தற்காலிகமாக நாணய வினியோகத்தை நிறுத்திவிட்டனர். அத்துடன், மாவட்ட தலைநகரங்கள், தாலுக்காக்களில் செயல்பட்டு வந்த தங்க நகைக் கடைகளில் உரிமையாளர்கள், தாங்கள் வைத்திருந்த தங்க நாணயங்களின் விற்பனையை நிறுத்திவிட்டனர். ஆபரண தங்கம், தங்கக் கட்டி ஆகியவற்றை மட்டுமே விற்பனை செய்கின்றனர். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாணய தயாரிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டதே, தங்க நாணய விற்பனை முடக்கத்துக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர். தங்க நாணயத்தின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும், தங்கத்தின் விலை மேலும் உயரும் என, தகவல் பரவி வருவதால், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)