பதிவு செய்த நாள்
24 ஆக2011
14:14
புதுடில்லி : உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தி நாடான இந்தியா, கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் சுமார் 51,500 டன் பால் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. 2010-11ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் 51,489.91 டன் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு 31,478.58 டன் பால் பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மாநிலங்களுக்கான விவசாயத்துறை அமைச்சரான சரண் தாஸ் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தியாவின் பால் பொருட்கள் ஏற்றுமதியும் கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 34,841.03 டன்களாக அதிகரித்துள்ளது. ஆனால் 2009-10ம் ஆண்டு முழுவதும் 42,680.70 டன்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி 18ம் தேதி வரை பால் மற்றும் பால் பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததால் பால் பொருட்களின் விலை பெருமளவு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|