பதிவு செய்த நாள்
24 ஆக2011
15:46
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய தனியார் தொலைத் தொடர்புத்துறை நிறுவனமான பார்தி ஏர்டெல், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் உள்ளிட்டவைகளுக்காக மத்திய அரசிற்கு செலுத்திய தொகை ரூ.1,177.48 கோடியாகும். இதில் உரிமத்திற்காக ரூ.755.22 கோடியும்,ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக ரூ.422.26 கோடியும் செலுத்தி உள்ளது. அதே சமயம் எடிசலட், யூனிடெக் வயர்லெஸ், லூப், எஸ்டெல், சிஸ்டிமா ஷ்யாம் தொலைத் தொடர்பு சேவைகள் ஆகியவை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக ரூ.80.78 கோடி செலத்தி உள்ளன. பார்தி நிறுவனத்தை தொடர்ந்து வோடோஃபோன் எஸ்ஸர் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிம தொகையாக ரூ.702.34 கோடியை அரசிற்கு செலுத்துகிறது. பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் ரூ.612.23 கோடி செலுத்துகின்றன. பிற தனியார் துறை நிறுவனங்களான டாடா டெலி சர்வீசஸ் ரூ.308.38 கோடியும், ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.497.94 கோடியும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.263.27 கோடியும் அரசிற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் உரிமத்திற்காக செலுத்தி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|