பதிவு செய்த நாள்
25 ஆக2011
00:07
சென்னை: நடப்பாண்டு, ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையி லான அரையாண்டில், சென்னையில் 30,800 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.மாபா ராண்ட்ஸ்டாட் நிறுவனம், இந்தியாவில் அமைப்பு சார்ந்த 13 துறைகளில் உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து, 690 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டது.நாட்டின் 8 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 6 மாத காலத்தில், 7 லட்சத்து 4 ஆயிரத்து 800 வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.இதில், டில்லி மற்றும் தலைநகர பிராந்தியம் 55ஆயிரத்து 800மும், மும்பை 53 ஆயிரத்து 100 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.சென்னை நகரம் 16 ஆயிரத்து 900 வேலை வாய்ப்புகளை உருவாக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், மருத்துவ சேவைத் துறை, ஒரு லட்சத்து 15 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடங்களில் விருந்தோம்பல் துறை (94 ஆயிரம்), தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைத் துறை (91ஆயிரம்) ஆகியவை உள்ளன.வரும் செப்டம்பர் மாதத்திற்குள், மேலும் 3 லட்சத்து 69 ஆயிரத்து 200 பணிகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, மாபா ராண்ட்ஸ்டாட் நிறுவனத்தின்நிர்வாக இயக்குனரும், சிறப்பு செயல் அலுவலருமான ஈ.பாலாஜிதெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|