பதிவு செய்த நாள்
25 ஆக2011
00:07
புதுடில்லி: இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 16 -18 சதவீத வளர்ச்சி காணும் என்று, நாஸ்காம் அமைப்பின் தலைவர் சோம் மிட்டல் தெரிவித்தார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' சர்வதேச பொருளாதார நெருக்கடியால், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை பாதிக்கப்படும் என்று அச்சப்படத் தேவையில்லை. புதிய சந்தைகளை கண்டறிந்து, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்று கூறினார்.இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வருவாயில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தின் பங்களிப்பு, 85 சதவீதத்திற்கும் (7,000 கோடி டாலர்) அதிகமாக உள்ளது.இந்நிலையில், அமெரிக்காமற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருõளதார நெருக்கடியால், சாப்ட்வேர் மற்றும் சேவைகள் துறையின் ஏற்றுமதி 16 -18 சதவீதம் (6,800 கோடி -7,000 கோடி டாலர்) என்ற அளவில் இருக்கும் என, நாஸ்காம் மதிப்பிட்டுள்ளது. உள்நாட்டில் இத்துறையின் வளர்ச்சி, 15 -17 சதவீதமாக (1,900 -2,000 கோடி டாலர்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், உலகளவில் பீ.பி.ஓ., எனப்படும் பணிகளை, வெளியாரிடம் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளும் துறையின் வளர்ச்சி, நடப்பு 2011ம் ஆண்டில் 6.3 சதவீதமாகவும், வரும் ஆண்டில் 5 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என்று, கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|