இந்தியாவில் 5 லட்சம் ரேஷன் கடைகள்இந்தியாவில் 5 லட்சம் ரேஷன் கடைகள் ...  உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் சிமென்ட் மற்றும் உருக்குப் பொருள்கள் விலை உயர வாய்ப்பு உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் சிமென்ட் மற்றும் உருக்குப் ... ...
பொதுத்துறை வங்கிகளின் தலைவர், நிர்வாக இயக்குனர் பதவிகளை பிரிக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2011
00:09

மும்பை: தற்போது,பொதுத்துறை வங்கிகளில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவி, ஒருவரிடமே உள்ளது. இதனை, இருவருக்கு பிரித்தளிக்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.மும்பையில், பிக்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இணைந்து நடத்திய கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ. சுப்பாராவ் கூறியதாவது:பொதுத்துறை வங்கிகளில், தற்போது, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவி பிரிக்கப்படாமல், ஒருவரே நிர்வகிக்கும் நிலை உள்ளது. இதனை, இருவர் நிர்வகிக்கும் வகையில், பிரித்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2004-05ம் ஆண்டில், ஏ.எஸ். கங்குலி தலைமையில், இப்பதவி குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியை, இரண்டாக பிரித்தளிக்கும் வகையில், பரிந்துரை செய்தது. கடந்த 2007ம் ஆண்டில், தனியார் துறை வங்கிகளில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை இருவர் வகிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது.இதற்கு, சிறப்பான வரவேற்பு இருந்தது. இதே திட்டத்தை, பொதுத்துறை வங்கிகளிலும், அமல்படுத்துவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மேம்படும்.ஒருவரிடமே, அதிக அளவிலான, அதிகாரங்களும், பொறுப்புகளும் இருப்பதால், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படுகிறது. இப்பதவிகளை பிரித்தளிப்பதன் வாயிலாக, வங்கி சேவை சிறந்த அளவில் மேம்படும்.இதற்கு எடுத்துக்காட்டாக, பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இவ்வங்கியின் தலைவர் பொறுப்பை ஒருவரும், நிர்வாக இயக்குனர் பொறுப்பை நான்கு பேரும் ஏற்றுள்ளனர். இதனால், இவ்வங்கி திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.நிறுவனங்கள், வங்கி துறையில் ஈடுபடுவது குறித்து, எழுந்த கேள்விக்கு, பதிலளித்து பேசிய சுப்பாராவ், ' நிறுவனங்கள் வங்கி துறையில் ஈடுபடுவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்பாக, வங்கிகளுக்கான சட்ட விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.இதற்கான வரைவுதிட்டம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் அனுமதி கிடைத்த பிறகுதான், நிறுவனங்கள் வங்கி சேவையில் ஈடுபடுவது குறித்து முடிவெடுக்க முடியும்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)