உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் சிமென்ட் மற்றும் உருக்குப் பொருள்கள் விலை உயர வாய்ப்பு உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் சிமென்ட் மற்றும் உருக்குப் ... ... 'சென்செக்ஸ்' 213 புள்ளிகள் சரிவு 'சென்செக்ஸ்' 213 புள்ளிகள் சரிவு ...
அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானின் கடன் தகுதி மதிப்பீடும் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2011
00:10

டோக்கியோ: அமெரிக்காவைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் கடன் தகுதி மதிப்பீடும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஜப்பான் உட்பட ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. இம்மாத தொடக்கத்தில், எஸ் அண்டு பி நிறுவனம், அமெரிக்காவின் கடன் தகுதி மதிப்பீட்டைடு 'ஏஏஏ' என்ற நிலையில் இருந்து 'ஏஏ+' ஆகக் குறைந்தது. இதனால், சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன.இந்நிலையில் நேற்று, மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம், ஜப்பான் நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை 'ஏஏ2' என்ற நிலையில் இருந்து ஒரு படி கீழிறக்கி, 'ஏஏ3' ஆகக் குறைத்துள்ளது. ஜப்பானில் கடந்த 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் மாறியதால், நிர்வாக சீர்திருத்தங்களை திறம்பட மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட சுனாமி, அணு உலை கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை தற்போதைய பிரதமர் நாட்டோ கான் சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில், ஜப்பானின் பொருளாதார மதிப்பான 5 லட்சம் கோடி டாலரை விட, அந்நாட்டின் கடன் இரு மடங்கு உயர்ந்துள்ளது.இத்தகைய காரணங்களால், ஜப்பானின் கடன் தகுதி மதிப்பீட்டை மூடீஸ் நிறுவனம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.ஜப்பான் கடந்த 1998ம் ஆண்டு, 'ஏஏஏ' அந்தஸ்தைப் பெற்றிருந்தது. தற்போது, இந்த நிலையில் இருந்து ஜப்பான் மூன்று படிகள் கீழிறங்கியுள்ளது. எனினும், தற்போதைய கடன் தகுதி மதிப்பீட்டின் படி, சீனாவிற்கு நிகராக ஜப்பான் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)