பதிவு செய்த நாள்
25 ஆக2011
00:10
டோக்கியோ: அமெரிக்காவைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் கடன் தகுதி மதிப்பீடும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஜப்பான் உட்பட ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. இம்மாத தொடக்கத்தில், எஸ் அண்டு பி நிறுவனம், அமெரிக்காவின் கடன் தகுதி மதிப்பீட்டைடு 'ஏஏஏ' என்ற நிலையில் இருந்து 'ஏஏ+' ஆகக் குறைந்தது. இதனால், சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன.இந்நிலையில் நேற்று, மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம், ஜப்பான் நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை 'ஏஏ2' என்ற நிலையில் இருந்து ஒரு படி கீழிறக்கி, 'ஏஏ3' ஆகக் குறைத்துள்ளது. ஜப்பானில் கடந்த 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் மாறியதால், நிர்வாக சீர்திருத்தங்களை திறம்பட மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட சுனாமி, அணு உலை கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை தற்போதைய பிரதமர் நாட்டோ கான் சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில், ஜப்பானின் பொருளாதார மதிப்பான 5 லட்சம் கோடி டாலரை விட, அந்நாட்டின் கடன் இரு மடங்கு உயர்ந்துள்ளது.இத்தகைய காரணங்களால், ஜப்பானின் கடன் தகுதி மதிப்பீட்டை மூடீஸ் நிறுவனம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.ஜப்பான் கடந்த 1998ம் ஆண்டு, 'ஏஏஏ' அந்தஸ்தைப் பெற்றிருந்தது. தற்போது, இந்த நிலையில் இருந்து ஜப்பான் மூன்று படிகள் கீழிறங்கியுள்ளது. எனினும், தற்போதைய கடன் தகுதி மதிப்பீட்டின் படி, சீனாவிற்கு நிகராக ஜப்பான் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|