பதிவு செய்த நாள்
25 ஆக2011
13:39
புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால அளவில் இந்தியாவின் மசாலா பொருட்கள் ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் ரூ.2,613.50 கோடிக்கு மசாலா பொருட்கள் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் மசாலா பொருட்களின் ஏற்றுமதி 24 சதவீதம் சரிந்து, 1,57,725 டன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மிளகு, இஞ்சி, மிளகாய், ஏலக்காய், ஜாதிக்காய், புதினா, மசாலா எண்ணெய்கள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதால் அரசுக்கு கிடைக்கும் வருமானமும் அதிகரித்து வருகிறது. மிளகுக்கான ஏற்றுமதி விலை 56 சதவீதமும், இஞ்சிக்கு 70 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று ஜாதிக்காய் மற்றும் புதினா தயாரிப்பு பொருட்களுக்கு 65 முதல் 73 சதவீதம் வரை ஏற்றுமதி விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏலக்காய்கான ஏற்றுமதி விலை கிலோவிற்கு ரூ.788.16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் பூண்டு ஏற்றுமதி 14,100 டன்னில் இருந்து 925 டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று கொத்தமல்லி 10,500 டன்னாகவும், பெருஞ்சீரகம் 2500 டன்னாகவும், சீரகம் 7750 டன்னாகவும், மிளகாய் 54,000 டன்னாகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|