பதிவு செய்த நாள்
27 ஆக2011
02:48
புதுடில்லி:நடப்பு 2011-12ம் ஆண்டு பயிர் காலத்தில், கரீப் பருவத்தில், நாட்டின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு அதிகரித் துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என, அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது. சென்ற 2010-11ம் பயிர் காலத்தில் (ஜூலை - ஜூன்), எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, மிக அதிகளவாக 3.11 கோடி டன் என்ற அளவில் இருந்தது. இதில், கரீப் பருவத்தின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியின் பங்களிப்பு, 2.08 டன் என்ற அளவில் சிறப்பாக அதிகரித்துக் காணப்பட்டது.நடப்பு கரீப் பருவத்தில், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு, 1.70 கோடி எக்டேராக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே பருவத்தில், 1.64 கோடி எக்டேராக இருந்தது. மேலும், அதிகரிக்கப்பட்டுள்ள பரப்பளவில், சோயா பீன், எள்ளு, மற்றும் ஆமணக்கு ஆகியவை, கணிசமான அளவு பயிரிடப்பட்டுள்ளன. இருப்பினும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிரிடும் பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்துள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுசில் கோயன்கா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|