பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவுபீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு ... நடப்பு 2011ம் ஆண்டு  ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.எம்.சந்தாதாரர்கள்சேர்க்கை 76 லட்சமாக குறைவு நடப்பு 2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.எம்.சந்தாதாரர்கள்சேர்க்கை 76 ... ...
நடப்பு 2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2011
02:51

புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், பெட்ரோலியப் பொருட்களை சந்தைப்படுத்தும், மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 1 லட்சத்து, 21 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, மத்திய எண்ணெய் துறை அமைச்சர் எஸ்.ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.பொதுத்துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவை, அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்து வருகின்றன. இதனால், இந்நிறுவனங்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 235 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டத்தில் அமைச்சர் கூறினார்.அண்மையில், மத்திய அரசு, டீசல் (லிட்டருக்கு ரூ.3), மண்ணெண்ணெய் (லிட்டருக்கு ரூ.2), சமையல் எரிவாயு (ஒரு சிலிண்டருக்கு ரூ.50) போன்றவற்றின் விலையை உயர்த்தியது. மேலும், இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. டீசல் மீதான உற்பத்தி வரி, லிட்டருக்கு 2.60 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையிலும், இந்நிறுவனங்களுக்கு, இழப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய, நிலையில், இந்நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 4.97 ரூபாயும், பொது வினியோகத் திட்டத்தின் வாயிலாக விற்கப்படும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயில் 23.74 ரூபாயும், ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயு விற்பனையில், 247 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசுக்கு, இறக்குமதி வரி மற்றும் உற்பத்தி வரி குறைப்பால், ஆண்டுக்கு, 49 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், அரசு, அதிகளவில் தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது.எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பால், இவற்றிற்கு அதிக நிதிச்சுமை ஏற்படுவதுடன், நடைமுறை மூலதனம், விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிக் கிறது. அதேசமயம், மக்கள் நலன் கருதியும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், மேற்கண்ட மூன்று பெட்ரோ லிய பொருட்களை, அடக்க விலைக்கும் குறைவாக விற்க வேண்டியுள்ளது.கடந்த 2010ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை, மத்திய அரசு நீக்கியது. இதன்படி, சந்தை நிலவரத்திற்கேற்ப, பெட்ரோல் விலையைநிர்ணயித்துக் கொள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அது முதல், இதுவரை யிலுமாக, பெட்ரோல் விலை, 21 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)