பதிவு செய்த நாள்
27 ஆக2011
09:06
சென்னை:''தமிழகம், புதுவையை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில், நடப்பு நிதி ஆண்டில், 3,200 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது'' என, பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் ஜே. சந்திரசேகரன் தெரிவித்தார்.எஸ்.பி.ஐ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டு வசதி கண்காட்சியை நேற்று அவர் துவக்கி வைத்தார்.இதன் பின், நிருபர்களிடம் சந்திரசேகரன் கூறியதாவது:சில தவிர்க்க முடியாத காரணங்களால், ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் துறை பாதிக்கும் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டது. நமது நாட்டில் குடியிருப்புக்கான தேவை அதிகமாக உள்ளதால், குறைந்த விலையிலான வீடுகள் விற்பனையை சார்ந்த ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்படாமல் உள்ளது.நடப்பு நிதி ஆண்டில், ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மண்டலத்தில் மட்டும், 3,200 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 350 கோடி ரூபாய் வரை வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான வீட்டுக்கடன் வழங்கும் சிறப்பு திட்டத்தில், 35 வயதுக்குட்பட்டவர்கள் வீட்டுக்கடன் பெற விண்ணப்பிக்கும் போது, அவர்களது எதிர்கால வருவாய் வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு, கடன் தொகை அதிகரித்து வழங்கப்படும்.வட்டி சலுகை...மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், 25 முன்னணி கட்டுமான நிறுவனங்கள் சார்பில், 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு வீடு வாங்க முடிவு செய்வோருக்கு, அவர்களது வருமான சான்றுகளை ஆய்வு செய்து, வீட்டுக்கடன் வழங்க, முதல் நிலை ஒப்புதல் வழங்கப்படும். இவர்களுக்கு, வீட்டுக்கடனுக்கான வட்டியில், 0.25 சதவீதம் தள்ளுபடி சலுகை வழங்கப்படும். மேலும் நடைமுறை கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|