பதிவு செய்த நாள்
27 ஆக2011
10:46
புதுடில்லி : 2010-11ம் நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2.8 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது மேலும் அதிகரித்து இந்த ஆண்டு இறுதியில் 4 பில்லியன் டாலர்களாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடல் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள குறிப்பின்படி 2010-11ம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 33.95 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010ம் ஆண்டில் 8,13,091 டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 19.85 சதவீதம் அதிகமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் நிலவும் அரசியல் குளறுபடிகள், சர்வதேச சந்தைகளில் இந்திய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு உள்ளிட்ட காரணங்களால் கடல்உணவு ஏற்றுமதி வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|