பதிவு செய்த நாள்
28 ஆக2011
03:44
மும்பை:சென்ற 2010 -11ம் நிதியாண்டில், இந்திய ரிசர்வ் வங்கியின் வருவாய், 13 சதவீதம் அதிகரித்து, 37 ஆயிரத்து 70 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2009 -10ம் நிதியாண்டில், 32 ஆயிரத்து 884 கோடி ரூபா யாக இருந்தது. ஜூலை முதல் ஜூன் வரையிலான காலத்தை, ரிசர்வ் வங்கி நிதியாண்டாகக் கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் வருவாயில், வெளிநாடுகளின் வாயிலாக பெறப்படும் வருவாய், 16 சதவீதம் சரிவடைந்து, 25 ஆயிரத்து 103 கோடியிலிருந்து, 21 ஆயிரத்து 150 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் இவ்வங்கிக்கு, உள்நாட்டு மூலாதாரங்களிலிருந்து கிடைக்கும் வருவாய் இரட்டிப்பு வளர்ச்சி கண்டு, 7 ஆயிரத்து 782 கோடியிலிருந்து, 15 ஆயிரத்து 920 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய், 14 சதவீதம் உயர்ந்து, 31 ஆயிரத்து 748 கோடியிலிருந்து, 36 ஆயிரத்து 126 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ் வங்கியின் மொத்த செலவினம், 3 சதவீதம் உயர்ந்து, 8,403 கோடியிலிருந்து, 8,655 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பணியாளர்களுக்கான செலவினம், 16 சதவீத அளவிற்குஉயர்ந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். முக்கிய முகமை அமைப்புகளுக்கான செலவினம், காசோலைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான பாதுகாப்பு பிரின்டிங் செலவு உள்ளிட்ட இதர செலவுகள் 2 சதவீதம் சரிவடைந்து, 6,415 கோடியிலிருந்து, 6,299 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் பணியாளர்கள் எண்ணிக்கை, 19 ஆயிரத்து 207 ஆக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|