உயர்வை நோக்கி சர்க்கரை விலை ரூ.500 குறைந்தது மிளகாய் வத்தல் உயர்வை நோக்கி சர்க்கரை விலை ரூ.500 குறைந்தது மிளகாய் வத்தல் ... அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.7,360 கோடி அதிகரிப்பு அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.7,360 கோடி அதிகரிப்பு ...
ரிசர்வ் வங்கி வருவாய் 13 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2011
03:44

மும்பை:சென்ற 2010 -11ம் நிதியாண்டில், இந்திய ரிசர்வ் வங்கியின் வருவாய், 13 சதவீதம் அதிகரித்து, 37 ஆயிரத்து 70 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2009 -10ம் நிதியாண்டில், 32 ஆயிரத்து 884 கோடி ரூபா யாக இருந்தது. ஜூலை முதல் ஜூன் வரையிலான காலத்தை, ரிசர்வ் வங்கி நிதியாண்டாகக் கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் வருவாயில், வெளிநாடுகளின் வாயிலாக பெறப்படும் வருவாய், 16 சதவீதம் சரிவடைந்து, 25 ஆயிரத்து 103 கோடியிலிருந்து, 21 ஆயிரத்து 150 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் இவ்வங்கிக்கு, உள்நாட்டு மூலாதாரங்களிலிருந்து கிடைக்கும் வருவாய் இரட்டிப்பு வளர்ச்சி கண்டு, 7 ஆயிரத்து 782 கோடியிலிருந்து, 15 ஆயிரத்து 920 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய், 14 சதவீதம் உயர்ந்து, 31 ஆயிரத்து 748 கோடியிலிருந்து, 36 ஆயிரத்து 126 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ் வங்கியின் மொத்த செலவினம், 3 சதவீதம் உயர்ந்து, 8,403 கோடியிலிருந்து, 8,655 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பணியாளர்களுக்கான செலவினம், 16 சதவீத அளவிற்குஉயர்ந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். முக்கிய முகமை அமைப்புகளுக்கான செலவினம், காசோலைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான பாதுகாப்பு பிரின்டிங் செலவு உள்ளிட்ட இதர செலவுகள் 2 சதவீதம் சரிவடைந்து, 6,415 கோடியிலிருந்து, 6,299 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் பணியாளர்கள் எண்ணிக்கை, 19 ஆயிரத்து 207 ஆக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)