பதிவு செய்த நாள்
28 ஆக2011
03:48
மும்பை:இந்திய மருந்து சந்தை வரும் 2015ம் ஆண்டிற்குள்,75 சதவீத வளர்ச்சி கண்டு 1 லட்சம்கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயரும் என, ஆய்வொன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் மருந்துகள் சந்தை, அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. எளிமையான மருந்து கட்டுப்பாட்டு விதிமுறைகள், குறைந்த விலை கொண்ட மருந்துகள், ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டுக்கு கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவம்போன்றவற்றால், இது சாத்தியமாகியுள்ளது. மேலும், இந்தியா, சீனா, மலேஷியா, தென்கொரியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் செலவிடும் வருவாய் அதிகரித்துள்ளதும், அதற்கேற்ப மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் மாறியுள்ளதும், பல விதநோய்களுக்கு இடம் அளிக்கக் கூடியதாக உள்ளது.இதயநோய், நீரிழிவு,புற்றுநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், இவ்வகைநோய்களுக்கான மருந்துகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. உலகளவில், மருந்து உற்பத்தியில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய மருந்து துறை, கடந்த 2005ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு சராசரியாக 14 சதவீதம் என்ற அளவில், வளர்ச்சி கண்டு வருகிறது. இச்சந்தை, அடுத்த 4 ஆண்டுகளில் 2,200கோடி டாலராக ( 1 லட்சம்கோடி ரூபாய்) வளர்ச்சி காணும் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. மருந்து ஏற்றுமதியிலும், இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த 2007-08ம் நிதியாண்டில், இந்திய மருந்துகளின் ஏற்றுமதி 825கோடி டாலராக (37 ஆயிரத்து 950கோடி ரூபாய்) இருந்தது.இது, ஆண்டிற்கு சரா சரியாக 15 சதவீத வளர்ச்சியை கண்டு தற்போது 1,200கோடி டாலராக (55ஆயிரத்து 200கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. 2008-13ம் நிதியாண்டுகளில், இந்திய மருந்து துறை, உள்நாட்டில் 15 சதவீதம் மற்றும் ஏற்றுமதியில் 4-7 சதவீத அளவிற்கு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், அடுத்த 9 ஆண்டுகளில், இந்திய மருந்து சந்தை, மூன்று மடங்காக உயரும் என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், இந்திய மருந்து நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றன. பலதரப்பட்டநோய்களுக்கான மருந்துகளை உருவாக்கும் முயற்சியிலும், மருந்து தயாரிப்புகளை அதிகரிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, இந்தியா மருந்து துறையில் முன்னணியில் உள்ள ரான்பாக்சிலேபாரேட்டரீஸ், சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரேட்டரீஸ் உள்ளிட்ட 10 நிறுவனங்கள், அவற்றின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.மேலும், இந்நிறுவனங்கள், மருந்துகளை சந்தைப்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2010-11ம் நிதியாண்டில், இந்நிறுவனங்கள், 6,000க்கும் அதிகமான மருந்து விற்பனை பிரதிநிதிகளை நியமித்துள்ளன. இவர்கள், மருத்துவர்களை அணுகி, மருந்துகளின் தன்மை மற்றும் பயன்பாடுகள் குறித்து எடுத்துக் கூறி, அவற்றின் விற்பனையை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருந்து துறையின் வளர்ச்சி காரணமாக, வரும் 2020ம் ஆண்டில், மருந்து விற்பனை பிரதிநிதிகளின் எண்ணிக்கை, 1 லட்சத்தில் இருந்து, 3 லட்சமாக உயரும் என்று மதிப்பிடப்பட் டுள்ளது. பைசர்,கிளாஸ்கோ ஸ்மித் கிளைன்,அரவிந்தோ பார்மா,கெடிலா ஹெல்த்கேர்,அவந்தீஸ் பார்மா,லூபின் லேபா ரேட் டரீஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், மருந்து விற்பனை பிரதிநிதிகளை அதிக அளவில் நியமித்து, வர்த் தகத்தை பெருக்கி வருகின்றன.இந்தியாவில், 5,000க்கும்மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் உள்ளன. பதிவு பெற்ற 92 ஆயிரம் பிராண்டுகளில்மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில், 340 அத்தியாவசிய மருந்துகளை மட்டுமே உலக சுகாதாரக் கழகம், பரிந்துரைத்துள்ளது. நாட்டில் விற்பனையாகும் பிராண்டு மருந்துகளில் 90 சதவீதம், பொதுப்பண்பு அடிப்படையிலானவை. இவற்றைவேறு படுத்திக் காட்டுவதற்காக, நிறுவனங்கள் பல்வேறு பெயர்களை சூட்டி விற்பனை செய்கின்றன. உதாரணமாக,மெர்க் அண்டுகோ நிறுவனத்தின்,கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான 'ஸேகோர்' என்ற பொதுப் பண்பியல் மருந்தை,ரான் பாக்சி நிறுவனம் 'சிம்வாடின்' என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதே பொதுப் பண்பியல் மருந்தை, சிப்லா நிறுவனம்'செம்கார்டு'என்ற பெயரிலும், லூபின் நிறுவனம் 'ஸ்டார்ஸ்டட்'என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகின் றன. இதேபோல், மெர்க் நிறுவனத்தின், ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆல்மைட்டி என்ற மாத்திரையை, கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் நிறுவனம் பெனிடெக் என்ற பெயரிலும், பைசர் டார்கிட் என்ற பெயரிலும் விற்பனை செய்கின்றன. இந்தியாவில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள், 43 பிராண்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.நாட்டில் இதய நோய்க்கு தீர்வளிக்கும் மாத்திரைகளின் சந்தை மதிப்பு மட்டும், 140கோடி டாலர் (6,440 கோடி ரூபாய்) என்ற அளவிற்கு உள்ளதாக இந்திய மருந்துகள் மற்றும் மருந்தாளுனர்கள் சங்கம் மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|