தனியார் துறையினர் வங்கி தொடங்க உரிமம்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறை தனியார் துறையினர் வங்கி தொடங்க உரிமம்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறை ... 'பங்குச் சந்தையில் மீண்டும் காளை தலை காட்டுகிறது...சென்செக்ஸ்' ஒரே நாளில் 567 புள்ளிகள் அதிகரிப்பு­­ 'பங்குச் சந்தையில் மீண்டும் காளை தலை காட்டுகிறது...சென்செக்ஸ்' ஒரே நாளில் 567 ... ...
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2011
00:26

புதுடில்லி: வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று, ரிசர்வ் வங்கிக்கு, வங்கியின் செயல்பாட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் உஷா தோரட் தலைமையிலான இக்குழு, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் குறித்து, பல்வேறு பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் அளித்துள்ளது.இதன்படி, வங்கி சாரா நிதி நிறுவனங்களின், 25 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேறு நபருக்கு மாற்றுவதற்கு முன்பாக, ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக அதிகாரத்தை மாற்றுவது, பிற நிறுவனங்களை கையகப்படுத்துவது அல்லது இணைத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்பாகவும், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற வேண்டும் என, இக்குழு பரிந்துரைத்துள்ளது.மேலும், பொதுமக்களிடம் நிதி திரட்டும் அனைத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களும், ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்து மதிப்பை கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களை மட்டுமே, ரிசர்வ் வங்கி பதிவு செய்ய வேண்டும். அதே சமயம், 1,000 கோடி ரூபாய்க்கும் குறைவான சொத்து மதிப்புடன், பொதுமக்களிடம் நிதி திரட்டாத, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, இந்த பதிவில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்துடன், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், திரட்டும் வருவாய், அளிக்கும் கடன் ஆகியவற்றில் ஏற்படும் இடர்பாட்டை எதிர் கொள்ளும் வகையில், ரொக்க கையிருப்பு, வங்கி இருப்பு, அர” கடன்பத்திர முதலீடுகள் உள்ளிட்டவற்றை பராமரித்து வர வேண்டும்.வங்கிகளுக்கு உள்ளது போல், சொத்தை வகைப்படுத்துதல், ஒதுக்கீடுகள் உள்ளிட்ட விதிமுறைகளை, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் படிப்படியாக அமல்படுத்த வேண்டும். வங்கிகளைப் போல், விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுந்த வருமான வரிச் சலுகைகள் மற்றும் கணக்கீட்டு நடைமுறைகளை மேற்கொள்ள, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, அனுமதி வழங்கலாம் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)