பதிவு செய்த நாள்
30 ஆக2011
12:35
புதுடில்லி: நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல்-ஜூலை) ஏலக்காய், மிளகாய், இஞ்சி, வெந்தயம் உள்ளிட்ட நறுமண பொருள்கள் ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டின் இதே மாதங்களைக் காட்டிலும் மதிப்பின் அடிப்படையில் 22 சதவீதம் அதிகரித்து ரூ.2,135 கோடியிலிருந்து ரூ2,613.50 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் அளவின் அடிப்படையில் 24 சதவீதம் சரிவடைந்து 2,08,775 டன்னிலிருந்து 1,57,725 டன்னாக குறைந்துள்ளது. இது இந்திய நறுமண பொருள்களுக்கு வெளிநாடுகளில் நல்ல விலை கிடைத்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக மிளகு, இஞ்சிக்கான ஏற்றுமதி விலை முறையே 56 சதவீதம் மற்றும் 70 சதவீதம் உயர்ந்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதி ஆண்டிற்கு ரூ.6,500 கோடி மதிப்பிற்கு 5 லட்சம் டன் நறுமண பொருள்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு மாதங்களில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் 33 சதவீதமும், அளவின் அடிப்படையில் 31 சதவீதமும் ஏற்றுமதியாகியுள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்கை அடைய முடியும் என வர்த்தக நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|