பதிவு செய்த நாள்
01 செப்2011
00:15
குன்னூர்: நடப்பாண்டு, ஜூன் வரையிலான, 7 மாதங்களில், சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தி, 3.61 சதவீதம் குறைந்து, 88.51 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. இது, சென்றாண்டு இதே காலத்தில், 92 கோடி கிலோவாக இருந்தது.உலகில், தேயிலை அதிகம் விளையும் நாடுகளில், நடப்பாண்டு உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக, சர்வதேச தேயிலை சந்தையில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ள கென்யாவில், தேயிலை உற்பத்தி, 20.50 கோடி கிலோவாக குறைந்துள்ளது.இந்தோனேஷியாவில் தேயிலை உற்பத்தி, 85 லட்சம் கிலோ குறைந்து, 3.80 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. மலாவியில் தேயிலை உற்பத்தி, 27 லட்சம் கிலோ குறைந்து, 3.45 கோடி கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டுக் காலத்தில், இலங்கையின் தேயிலை உற்பத்தியும், 11 லட்சம் கிலோசரிவடைந்து, 19.56 கோடி கிலோவாக குறைந்துள்ளது.இந்நாடுகளில் பருவ நிலை மாற்றம் உள்ளிட்டக் காரணங்களால், தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.அதே சமயம், இதர நாடுகளில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|