பதிவு செய்த நாள்
01 செப்2011
00:17
சென்னை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மியூச்சுவல் பண்டு (எஸ்.பீ.ஐ.எம்.எப்), 'எஸ்.பீ.ஐ கோல்டு பண்டு' என்ற தங்க நிதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.காலவரையற்ற இத்திட்டத்தில் திரட்டப்படும் நிதியில், 95 -100 சதவீதம், 'எஸ்.பீ.ஐ கோல்டு ஈ.டி.எப்' திட்டத்தில், முதலீடு செய்யப்படும். ஒரு யூனிட் 10 ரூபாய் வீதம், குறைந்தபட்ச முதலீடு, 5,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் யூனிட்டுகளின் அடிப்படையில் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி முறையில், மாதம் 100 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, டீமேட் கணக்கு தேவையில்லை. நுழைவுக் கட்டணம் இல்லை. எனினும் ஓராண்டிற்குள் முதலீட்டை திரும்பப் பெற்றால், ஒரு சதவீதம் வெளியேறும் கட்டணம் வசூலிக்கப்படும்.தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஆவண வடிவில் தங்கத்தில் முதலீடு மேற்கொள்ளும் வாய்ப்பை இத்திட்டம் வழங்குகிறது. இவ்வெளியீடு வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|