பதிவு செய்த நாள்
01 செப்2011
00:18
புதுடில்லி: சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பருப்பு வகைகள் இறக்குமதி, 26 சதவீதம் சரிவடைந்து, 26 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2009-10ம் நிதியாண்டில், 35 லட்சம் டன்னாக இருந்தது.சென்ற நிதியாண்டின் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் பருப்பு வகைகள் உற்பத்தி, 1.81 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.46 கோடி டன்னாக இருந்தது.சர்வதேச அளவில், பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதில், இந்தியா முன்னணி நாடாக உள்ளது. இருப்பினும், உள்நாட்டுக்கான தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. இதன் காரணமாக, நம்நாடு பருப்பு வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.தனியார் துறை நிறுவனங்களை தவிர, பொதுத்துறை நிறுவனங்களான எம்.எம்.டி.சி., பி.ஈ.சி., எஸ்.டி.சி.,மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் பருப்பு வகைகளை இறக்குமதி செய்துகொள்கின்றன.கடந்த ஓராண்டு காலமாக, மும்பை, சென்னை மற்றும் கோல்கட்டா ஆகிய பெரு நகரங்களில், துவரை, உளுந்து, பாசிப் பயிறு உள்ளிட்ட பருப்பு வகைகளின் சில்லரை விற்பனை விலை, படிப்படியாக குறைந்து வருகிறது என,மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ், ராஜ்ய சபாவில்தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|