வர்த்தகம் » பொது
செப்டம்பர் மாத விற்பனைக்கு 19.31 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 செப்2011
00:19
புதுடில்லி: மத்திய அரசு, இம்மாதத்தில், ரேஷன் மற்றும் வெளிச் சந்தையில், விற்பனை செய்ய, 19.31 லட்சம் டன் சர்க்கரையை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், 17லட்சம் டன் சர்க்கரை வெளிச்சந்தை மூலமும், 2.31 லட்சம் டன் ரேஷன் கடைகள் வாயிலாகவும் விற்பனை செய்யப்படும் என, மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாத விற்பனைக்காக மத்திய அரசு, மொத்தம், 19.20 லட்சம் டன் சர்க்கரையை ஒதுக்கீடு செய்திருந்தது. 2010-11ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.42 கோடி டன்னாக இருந்தது.இது, இதற்கு முந்தைய சர்க்கரை பருவத்தில் (அக்.-செப்.), 1.88 கோடி டன்னாக இருந்தது. தற்போதைய நிலையில், உள்நாட்டில், சர்க்கரைக்கான தேவை, ஆண்டுக்கு 2.10-2.15 கோடி டன்னாக உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 01,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 01,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 01,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 01,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 01,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!