செப்டம்பர் மாத விற்பனைக்கு 19.31 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடுசெப்டம்பர் மாத விற்பனைக்கு 19.31 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடு ... உற்பத்தி குறைந்ததால் மிளகு விலை உயர்கிறது உற்பத்தி குறைந்ததால் மிளகு விலை உயர்கிறது ...
சர்வதேச சந்தைகளில் தேவை அதிகரிப்பு மருந்து ஏற்றுமதி ரூ.55,000 கோடியை எட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2011
00:19

ஐதராபாத்: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், மருந்துகள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டை விட, 17-20 சதவீதம் அதிகரித்து, 1,200 கோடி டாலராக (55 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில், நாட்டின் மருந்து ஏற்றுமதி, அதற்கு முந்தைய ஆண்டை விட, 17.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,030 கோடி டாலராக (47 ஆயிரத்து 380 கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது என, மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (பார்ம்எக்ஸில்) செயல் இயக்குனர் பி.வி. அப்பாஜி தெரிவித்தார்.நம் நாட்டின் பல்வேறு வகையான மருந்துகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. மொத்த ஏற்றுமதியில், பொதுப் பண்பு அடிப்படையிலான மருந்துஏற்றுமதி 58 சதவீத அளவிற்கு உள்ளது.இதுதவிர, முக்கிய இடைநிலை மருந்துகளின் ஏற்றுமதி 40 சதவீதம் என்ற அளவிலும், ஆயுர்வேதம், மூலிகைகள், ஊட்டச்சத்து மருந்துகள் ஆகியவற்றின் பங்களிப்பு 2 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது என, இக்கவுன்சில் தெரிவித்துள்ளது.கடந்த ஓர் ஆண்டாக, நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மந்தமாக உள்ள நிலையில், மருந்து உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் செயல்பாடு,நன்கு இருப்பதுடன் இத்துறை நிறுவனப் பங்குகளின் விலையும், அதிகம் சரிவடையாமல் உள்ளன. குறிப்பிட்ட சில மருந்து துறை நிறுவனப் பங்குகளின் விலை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச ஆலோசனை நிறுவனமான, பிரைஸ்வாட்டர்ஹவுஸ், வரும் 2020ம் ஆண்டில், உலக மருந்து சந்தையின் மதிப்பு, 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது.இதில், பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய'இ-7' நாடுகளின் மருந்து விற்பனையின் பங்களிப்பு 5ல், 1 பங்கு என்ற அளவில் இருக்கும் என, இந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.நாட்டின் மொத்த மருந்து ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 15 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)