பதிவு செய்த நாள்
01 செப்2011
00:20
கொச்சி : சர்வதேச சந்தையில், மிளகு அளிப்பு குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.பொதுவாக, ஜூன் - டிசம்பர் மாதங்களில் இந்தோனேஷியா மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்துஅதிகளவிலான மிளகு, சர்வதேச சந்தைக்கு வருவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு இந்தோனேஷியாவில் மிளகு உற்பத்தி குறைந்துள்ளது. பிரேசில் நாட்டின் மிளகு உற்பத்தி 35ஆயிரம் டன் என்ற அளவிற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச சந்தையில் மிளகு அளிப்பு குறைந்து விலை உயர்ந்துள்ளதால், பிரேசில் நாட்டை சேர்ந்த வளமான விவசாயிகள், மிளகை விற்பனைக்கு அனுப்பாமல், இருப்பில் வைத்துள்ளனர்.வியட்நாம் நாட்டின் மிளகு கையிருப்பு 15 ஆயிரம் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 10ஆயிரம் டன் மிளகு, முன்னணி ஏற்று மதி நிறுவனங்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சர்வதேச சந்தையில் வியட்னாம் மிளகின் அளிப்பு குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. சென்ற மாதம், வியட்நாம் நாட்டின் '500 ஜி1' வகையை சேர்ந்த ஒரு டன் மிளகு விலை 5,600 டாலர் என்ற அளவில் இருந்தது. இது தற்போது 7,050 டாலராக அதிகரித்துள்ளது.உள்நாட்டில், அஸ்தா வகை மிளகு, ஒரு டன் 7,500 -7,550 டாலர் என்ற அளவில் விற்பனையாகிறது. முன்பேர சந்தையில், ஒரு கிலோ மிளகு 305 -312 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. இது, சென்ற ஜூலை மாதம் 280 ரூபாயாக இருந்தது. கடந்தாண்டு இது 198 ரூபாயாக குறைந்திருந்தது.மிளகு உற்பத்தி போதிய அளவிற்கு இல்லாததாலும், குளிர் காலத்தில் மிளகிற்கான தேவை அதிகரிக்கும் என்பதாலும், அதன் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|