பதிவு செய்த நாள்
02 செப்2011
16:43
மும்பை: உணவுப்பொருள் பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகிய காரணிகளையும் மீறி, மும்பை பங்குச்சந்தை 3வது வேலை நாளாக இன்றும் ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144.71 புள்ளிகள் உயர்ந்து 16,821.46 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 5040 புள்ளிகளாகவும் இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம் அதிகபட்ச ஆதாயத்தை பதிவு செய்தது. இதுகுறித்து வர்த்தகர்கள் கூறுகையில், சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகள் வாங்கப்பட்டதால், பங்குச்சந்தை ஏற்றம் பெற்றதாக தெரிவித்தனர். மேலும் உணவுப்பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியது மற்றும் கடந்த ஏப்ரல் ஜூன் மாதத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகியவை வர்த்தகத்தின் எதிர்மறையான காரணியாக கருதப்பட்டாலும், அதையும் மீறி பங்குச்சந்தை உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|