பதிவு செய்த நாள்
03 செப்2011
03:08
சென்னை:பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 'பாரத் பைக்' என்று பெயரிடப் பட்டுள்ள 'பாக்சர் 150 சி.சி.' மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பொது மேலாளர் சந்திரசேகர் கூறியதாவது: இந்தியாவில், மோட்டார் சைக்கிள் விற்பனை ஆண்டு தோறும், 13 முதல் 15 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், புதிய வாகனங்களை அறிமுகம் செய்வதில், பஜாஜ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. கிராமப்புற மக்களை குறிவைத்து, அதிக ”மையை ஏற்றிச் செல்லும் வகையில், இந்த பாரத் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வலிமையான பிரேம், உலோக உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக் ஸ்டார்டர், இரட்டை ஸ்பிரிங் எஸ்.என்.எஸ்., சஸ்பென்சன், அதிக எடை தாங்கும் கேரியர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மாதத்திற்கு, 30 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. ஒரு லிட்டருக்கு 62 கி.மீ., செல்லக்கூடியது. இதன் விலை, 43 ஆயிரத்து 247 ரூபாயாகும். இது, இதர 100 சி.சி. மோட்டார் சைக்கிள்களின் விலையை விட குறைவாகும். இவ்வாறு சந்திரசேகர் கூறினார். பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு ஆமதாபாத், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனம் 'பல்சர்' உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளில் ஆண்டுக்கு, 40 லட்சம் பைக்குகளை தயா ரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|