மாருதி சுசூகி இந்தியா வாகன விற்பனை 13 சதவீதம் சரிவுமாருதி சுசூகி இந்தியா வாகன விற்பனை 13 சதவீதம் சரிவு ... அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.8,000 கோடிக்கு பங்குகள், கடன் பத்திரங்கள் விற்பனை அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.8,000 கோடிக்கு பங்குகள், கடன் பத்திரங்கள் விற்பனை ...
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய 'பாக்சர் 150 சி.சி.' பைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2011
03:08

சென்னை:பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 'பாரத் பைக்' என்று பெயரிடப் பட்டுள்ள 'பாக்சர் 150 சி.சி.' மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பொது மேலாளர் சந்திரசேகர் கூறியதாவது: இந்தியாவில், மோட்டார் சைக்கிள் விற்பனை ஆண்டு தோறும், 13 முதல் 15 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், புதிய வாகனங்களை அறிமுகம் செய்வதில், பஜாஜ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. கிராமப்புற மக்களை குறிவைத்து, அதிக ”மையை ஏற்றிச் செல்லும் வகையில், இந்த பாரத் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வலிமையான பிரேம், உலோக உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக் ஸ்டார்டர், இரட்டை ஸ்பிரிங் எஸ்.என்.எஸ்., சஸ்பென்சன், அதிக எடை தாங்கும் கேரியர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மாதத்திற்கு, 30 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. ஒரு லிட்டருக்கு 62 கி.மீ., செல்லக்கூடியது. இதன் விலை, 43 ஆயிரத்து 247 ரூபாயாகும். இது, இதர 100 சி.சி. மோட்டார் சைக்கிள்களின் விலையை விட குறைவாகும். இவ்வாறு சந்திரசேகர் கூறினார். பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு ஆமதாபாத், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனம் 'பல்சர்' உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளில் ஆண்டுக்கு, 40 லட்சம் பைக்குகளை தயா ரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)