பதிவு செய்த நாள்
03 செப்2011
03:11
புதுடில்லி:அன்னிய நிதி நிறுவனங்கள், கடந்த ஆகஸ்டில், இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரசந்தைகளில் இருந்து, 8,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளன. இது, 2008, அக்டோபருக் குப் பின், அதிகளவில் திரும்பப் பெறப்பட்ட தொகையாகும். கடந்த ஆகஸ்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், 69 ஆயிரத்து, 590 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை வாங்கியுள்ளன. அதேசமயம், 77 ஆயிரத்து, 493 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை விற்பனை செய்துள்ளன. இதன் மூலம், அன்னிய நிதி நிறுவனங்கள், இம்மாதத்தில் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட, 7,902 கோடி ரூபாயை மொத்த முதலீட்டில், நிகர அளவில், திரும்பப் பெற்றுள்ளன. கடந்த, 2008, அக்டோபரில் அன்னிய நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 13 ஆயிரத்து, 489 கோடி ரூபாய் மதிப் பிலான பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை விற்பனை செய்துள்ளன. இதற்குப் பின், நடப்பாண்டு, கடந்த ஆகஸ்டில் தான் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிகளவிலான முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், அன்னிய நிதி நிறுவனங்கள், கடந்த ஜூன் மற்றும் ஜூலையில், இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன்பத்திரசந்தைகளில், முறையே, 4,883 கோடி மற்றும் 10 ஆயிரத்து, 652 கோடி ரூபாய் முதலீடு செய்துள் ளன. கடந்த ஆகஸ்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், அதிகளவில் பங்குகளை விற்றதால், மும்பை பங்குச் சந்தை யின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 1,500 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. முதலீட்டாளர்கள், 5 லட்சத்து, 55 ஆயிரத்து, 650 கோடி ரூபாயை இழந்தனர். இதே போல், நடப்பாண்டு, கடந்த ஜனவரியில், முதலீட்டாளர்கள், 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பைசந்தித்தது குறிப்பிடத்தக்கது. மதிப்பீட்டு மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரசந்தையில், 2,931 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. அதேசமயம், பங்குச் சந்தையில் இருந்து,10 ஆயிரத்து, 831 கோடி ரூபாயை திரும்பப் பெற்றன. நடப்பாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில், 19 ஆயிரத்து, 531 கோடி ரூபாயை முதலீடு செய் துள்ளன. 2010ம் காலண்டர் ஆண்டில், 1 லட்சத்து, 79 ஆயிரத்து, 674 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி'யிடம் அயல் நாட்டை சேர்ந்த, 1,735 நிதி நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|