பதிவு செய்த நாள்
03 செப்2011
03:11
புதுடில்லி:தேசிய அளவிலான தொழில் உற்பத்தி கொள்கையை, இம்மாத இறுதிக்குள் வெளியிட, மத்திய அர” திட்டமிட்டுள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:நாடு முழுவதும், பெரிய அளவில், சர்வதேச தொழில் நுட்ப வசதிகள் கொண்ட தொழில் பூங் காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தயாரிப்புத் துறையின் பங்களிப்பு, 15-16 சதவீதம் என்ற அளவில் உள்ளது. புதிய தொழில் கொள்கையில், 2020ம் ஆண்டிற்குள், தயாரிப்புத் துறையின் பங்களிப்பை, 20 சதவீதமாக உயர்த்தவும், மேலும், 10 கோடி பேர், வேலை வாய்ப்பை பெறவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, தேசிய தொழில் உற்பத்தி கொள்கை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். இப்புதிய தொழில் கொள்கையின் வாயிலாக, நாடு தழுவிய அளவில், தேசிய உற்பத்தி முதலீட்டு மண்டலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இம்மண்டலங்களில் இடம் பெறும் நிறுவனங்களுக்கு, வரிச் சலுகை, தொழி லாளர் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்த விவரங்கள் போன்றவை, தேசிய தொழில் கொள்கையில் இடம் பெறும்.மத்திய - மாநில அரசுகளின் கூட்டுடன், 4-5 மாநிலங்களில் சர்வதேச தரத்தில் தேசிய உற்பத்தி முதலீட்டு மண்டலங்கள் அமைக்கப்படும். இவ்வாறு ஆனந்த்சர்மா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|