பதிவு செய்த நாள்
03 செப்2011
03:13
மும்பை:ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய இரு விடுமுறை தினங்களுக்கு பிறகு, வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. அதே சமயம், அமெரிக்கா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தை களில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. மேலும், நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், ஆகஸ்ட் 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 10.05 சதவீதமாக உயர்ந்துள்ளது போன்ற செய்திகளால், வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக, குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்ததால், ஒட்டு மொத்த அளவில் இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.நடப்பு வாரத்தில், திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில்,பங்கு வியாபாரம் சிறப்பாக இருந்ததையடுத்து, அவ்விரு தினங் களிலுமாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் மொத்தம், 828 புள்ளிகள் அதிகரித்திருந்தது. வெள்ளியன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, உலோகம், ரியல் எஸ்டேட் ஆகிய துறை களைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது. மேலும், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் வாகன விற்பனை வளர்ச்சி மேம்பட்டிருந்ததையடுத்து, இத்துறை நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும்போது, 144.71 புள்ளிகள் அதிகரித்து, 16,821.46 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,989.86 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,688.06 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 39 புள்ளிகள் உயர்ந்து, 5,040 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,113.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,993.35 புள்ளிகள் வரையிலும் சென்றது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|