மகிந்திரா அண்டு மகிந்திராடிராக்டர் விற்பனை 19 சதவீதம் உயர்வுமகிந்திரா அண்டு மகிந்திராடிராக்டர் விற்பனை 19 சதவீதம் உயர்வு ... சாதகமான பருவ நிலையால், நடப்பு ஆண்டில்சர்வதேச ரப்பர் உற்பத்தி 5சதவீதம் அதிகரிக்கும் சாதகமான பருவ நிலையால், நடப்பு ஆண்டில்சர்வதேச ரப்பர் உற்பத்தி 5சதவீதம் ... ...
உலக பங்குச் சந்தைகளால் பாதிப்பில்லை பீ.எஸ்.இ 'சென்செக்ஸ்' 145 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2011
03:13

மும்பை:ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய இரு விடுமுறை தினங்களுக்கு பிறகு, வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. அதே சமயம், அமெரிக்கா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தை களில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. மேலும், நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், ஆகஸ்ட் 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 10.05 சதவீதமாக உயர்ந்துள்ளது போன்ற செய்திகளால், வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக, குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்ததால், ஒட்டு மொத்த அளவில் இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.நடப்பு வாரத்தில், திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில்,பங்கு வியாபாரம் சிறப்பாக இருந்ததையடுத்து, அவ்விரு தினங் களிலுமாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் மொத்தம், 828 புள்ளிகள் அதிகரித்திருந்தது. வெள்ளியன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, உலோகம், ரியல் எஸ்டேட் ஆகிய துறை களைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது. மேலும், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் வாகன விற்பனை வளர்ச்சி மேம்பட்டிருந்ததையடுத்து, இத்துறை நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும்போது, 144.71 புள்ளிகள் அதிகரித்து, 16,821.46 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,989.86 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,688.06 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 39 புள்ளிகள் உயர்ந்து, 5,040 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,113.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,993.35 புள்ளிகள் வரையிலும் சென்றது

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)