பதிவு செய்த நாள்
03 செப்2011
03:14
கொச்சி:சர்வதேச அளவில், ரப்பர் பயன்பாடு அதிகரித்து, அந்த அளவிற்கு உற்பத்தி இல்லாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சர்வதேச சந்தையில், இயற்கை ரப்பரின் விலை மிகவும் அதிகரித்திருந்தது. இந்நிலையில், நடப்பாண்டில், இயற்கை ரப்பர், அதிகளவில் உற்பத்தியாகும் பல நாடுகளில், இதன் உற்பத்தி நன்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இவ்வாண்டு, இதன் விலை, உயர வாய்ப்பில்லை என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்க நிலையால், மோட்டார் வாகனத் துறையில், கார் விற்பனை குறைந்து போயுள்ளது. எனவே, தேவைக்கும் அதிகமாக ரப்பர் அளிப்பு இருக்கும் என்ற மதிப்பீடும் உள்ளது.இந்நிலையில், நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், சர்வதேச அளவில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 29 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 21 லட்சம் டன் என்றளவில் இருந்தது. இயற்கை ரப்பர் உற்பத்தி, நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு காலண்டர் ஆண்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது,நடப்பு காலண்டர் ஆண்டில், சர்வ தேசஅளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி, 5சதவீதம் உயர்ந்து 99.60 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப் பிடப் பட்டுள்ளது. நடப்பாண்டு தாய்லாந்தில், அதிக அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 33 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஷி யாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 29 லட்சம் டன்னாகவும், மலேசியாவின் உற்பத்தி, 9 லட்சத்து, 75 ஆயிரம் டன் என்ற அளவிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேசஅளவில், இயற்கை ரப்பர் உற்பத்தியில், இந்தியா நான்காமிடத்தில் உள்ளது. நம் நாட்டில், நடப்பாண்டு இயற்கை ரப்பர் உற்பத்தி, 9 லட்சத்து 1,000 டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற ஏப்ரல் மாதம்,சர்வதேசஅளவில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 6 லட்சத்து, 28 ஆயிரம் டன்னாக இருந்தது. இது, மே மாதம், 7 லட்சத்து, 18 ஆயிரம் டன்னாக உயர்ந்தது. தற்காலிக மதிப்பீட்டின்படி, சென்ற ஜூன் மாதம் சர்வதேச இயற்கை ரப்பர் உற்பத்தி, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 5.3சதவீதம் அதிகரித்து, 8 லட்சத்து, 42 ஆயிரம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலண்டில், உலக நாடுகளின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 27 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, 3.3சதவீதம் அதிகமாகும்.தற்போதைய மதிப்பீட்டின்படி, சென்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்,சர்வதேசஅளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி, முறையே, 9 லட்சத்து, 19 ஆயிரம் டன் மற்றும் 9 லட்சத்து, 89 ஆயிரம் டன் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. நடப்பு செப்டம்பர் மாதம், இயற்கை ரப்பர் உற்பத்தி, 9 லட்சத்து, 89 ஆயிரம் டன்னாக இருக்கும் என்று எதிர் பார்க் கப்படுகிறது. அக்டோபரில், இதன் உற்பத்தி, 3.8சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.பருவ நிலைசாதகமாக உள்ளதால், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், இயற்கை ரப்பர் உற்பத்தி, அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில், போதிய அளவிற்கு, இயற்கை ரப்பர் அளிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விலைஉயராது என்று தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|