பதிவு செய்த நாள்
04 செப்2011
10:38
மங்களூரூ: இளைய தலைமுறையை கவர்ந்திழுக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய கிளைகள் விரைவில் துவங்கப்பட <உள்ளது என வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான <உபேந்திரா காமத் தெரிவித்துள்ளார். முதல் கிளை நவம்பர் ஒன்றாம் தேதி துவங்கப்படும் எனவும் துவங்கப்படும் நகரம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வங்கி அனைத்து நகரங்களிலும் வணிகர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால் கரண்ட் அக்கவுண்ட் உடன் கூடிய சேமிப்பு கணக்கை துவக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் வங்கி நிறுவனர் நாளான அக்டோபர் 23-ம் தேதிக்குள் 80க்கும் மேற்பட்ட கிளைகளை துவக்க முடிவு செய்துள்ளது. தற்போது 250 ஏடிஎம் மையங்கள் உள்ளது. அதன் எண்ணிக்கையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிகச்சிறிய மற்றும் நடுத்தர மூதலீட்டார்களை கவரும் வகையில் டில்லி, மும்பை, பெங்களூரூ நகரங்களில் வங்கியின் மண்டல அலுவலகங்களை திறக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|