பதிவு செய்த நாள்
04 செப்2011
10:40
புதுடில்லி: தங்கம் விலை நாளுக்குநாள் விலை கூடிக்கொண்டிருந்த போதிலும் தொடர்ந்து வரும் சுபமுகூர்த்த தினம் மற்றும் திருவிழா போன்ற காரணங்களை முன்னிட்டு மக்களின் வாங்கும் மனநிலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்த வில்லை என்பது உண்மை. கடந்த ஆண்டுடை காட்டிலும் இந்த ஆண்டு தங்கத்தின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் மற்ற இனங்களில் முதலீடு செய்வதை காட்டிலும் மஞ்சள் உலோகம் என்றழைக்கப்படும் தங்கத்தில் முதலீடு செய்தால் அதன் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் தொடர்ந்து வரும் விழா காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்கி சேமித்து வைத்து கொள்ளவே விரும்புகின்றனர். அதற்கு ஏற்றார் போல் மிகப்பெரிய ஷோரூம் கள் முதல் சிறிய கடைகள் வரை மாதாந்திர தவணை திட்டம் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி பொதுமக்களை தங்கத்தில் முதலீடு செய்ய வைக்க தூண்டுகின்றது. சிறுகசிறுக தங்கத்தில் முதலீடு செய்வதால் விலை உயர்வு என்பதை யாரும் பெரிதாக கண்டுகொள்வதாக தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|