பதிவு செய்த நாள்
04 செப்2011
12:19
புதுடில்லி: அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனமும் ஜப்பானின் நிப்பான் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து மூலதனச்சந்தை மற்றும்வர்த்தக துறையில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கையெழுத்தானது. ஏற்கனவே ரிலையன்ஸின் இன்சூரன்ஸ்துறையில் நிப்பான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. தற்போது மேலும் வர்த்தக துறையில் இணைந்துள்ளது என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி தெரிவித்துள்ளார். நிப்பான் இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில்மட்டும் சுமார் 3 பில்லியன் டாலர் அளவிற்கு நிகரலாபத்தை கொண்டுள்ளது. மேலும் மார்ச் மாதம் முடிவில் சுமார் 1.2 மில்லியன் பாலிசிகளை பெற்றுள்ளது. இந்நிறுவனம் லைப் இன்சூரன்சை தவிர பென்சன்பிளான், மெடிக்கல் கவரேஜ் திட்டங்களையும் கொண்டு செயல்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|