இ-வேஸ்ட் எண்ணிக்கை  அதிகரிப்புஇ-வேஸ்ட் எண்ணிக்கை அதிகரிப்பு ... டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம்புதிய 'டாட்டா விஸ்டா' கார் அறிமுகம் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம்புதிய 'டாட்டா விஸ்டா' கார் அறிமுகம் ...
ஏப்ரல்-ஆகஸ்ட் மாத காலத்தில்நாட்டின் காபி ஏற்றுமதி 29 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2011
00:16

கொச்சி:நாட்டின் காபி ஏற்றுமதி, நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 94 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 29 சதவீதம் (1 லட்சத்து 30 ஆயிரத்து 48 டன்) அதிகமாகும்.இதே காலத்தில், ஏற்றுமதி செய்யப்பட்ட காபியின் விலை, டன்னுக்கு, 37 சதவீதம் அதிகரித்து, அதாவது, 99 ஆயிரத்து 271 லிருந்து, 1 லட்சத்து 35 ஆயிரத்து 737 ரூபாயாகஉயர்ந்துள்ளது என, காபி வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில், மதிப்பு அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 77 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,291 கோடியிலிருந்து, 2,282 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு 2011ம் ஆண்டு காலண்டர் ஆண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில், காபி ஏற்றுமதி, 34 சதவீதம் அதிகரித்து, 2லட்சத்து 517 டன் என்ற அளவிலிருந்து, 2 லட்சத்து 68 ஆயிரத்து 169 டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு 2010 - 11ம் காபி பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்), ஆகஸ்ட் வரையிலான, 11 மாத காலத்தில், காபி ஏற்றுமதி 36 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 45 ஆயிரத்து 61 டன்னிலிருந்து, 3 லட்சத்து 34 ஆயிரத்து 31 டன்னாக உயர்ந்துள்ளது.நம் நாட்டிலிருந்து, இத்தாலி, ஜெர்மன், ரஷ்யா,பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் காபி ஏற்றுமதி ஆகிறது என, காபி வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)