பதிவு செய்த நாள்
07 செப்2011
00:16
கொச்சி:நாட்டின் காபி ஏற்றுமதி, நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 94 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 29 சதவீதம் (1 லட்சத்து 30 ஆயிரத்து 48 டன்) அதிகமாகும்.இதே காலத்தில், ஏற்றுமதி செய்யப்பட்ட காபியின் விலை, டன்னுக்கு, 37 சதவீதம் அதிகரித்து, அதாவது, 99 ஆயிரத்து 271 லிருந்து, 1 லட்சத்து 35 ஆயிரத்து 737 ரூபாயாகஉயர்ந்துள்ளது என, காபி வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில், மதிப்பு அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 77 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,291 கோடியிலிருந்து, 2,282 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு 2011ம் ஆண்டு காலண்டர் ஆண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில், காபி ஏற்றுமதி, 34 சதவீதம் அதிகரித்து, 2லட்சத்து 517 டன் என்ற அளவிலிருந்து, 2 லட்சத்து 68 ஆயிரத்து 169 டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு 2010 - 11ம் காபி பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்), ஆகஸ்ட் வரையிலான, 11 மாத காலத்தில், காபி ஏற்றுமதி 36 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 45 ஆயிரத்து 61 டன்னிலிருந்து, 3 லட்சத்து 34 ஆயிரத்து 31 டன்னாக உயர்ந்துள்ளது.நம் நாட்டிலிருந்து, இத்தாலி, ஜெர்மன், ரஷ்யா,பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் காபி ஏற்றுமதி ஆகிறது என, காபி வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|