பதிவு செய்த நாள்
07 செப்2011
00:18
மும்பை:டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில், புதிய 'டாட்டா விஸ்டா' அதிநவீன சொகு” காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய கார், 1,300 சி.சி. திறன் கொண்ட டீசல் இன்ஜின் மற்றும் 1,400 சி.சி. திறன் கொண்ட எம்.பி.எப்.ஐ சபையர் பெட்ரோல் இன்ஜின் என, இரு வகைகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதிக இட வசதி, மேடு, பள்ளங்களில் அலுங்காமல் செல்வதற்கு வகை செயய்யும் வலிமையான பிஷர் பிளேட்டுகள், 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஆடியோ சாதனம், வெளிப்புறத்தில் உள்ள ரியர்வியூ கண்ணாடிகளை தானியங்கி முறையில் இயக்கும் தன்மை, சொகுசான பயணம் என, பலதரப்பட்ட சிறம்பம்சங்களுடன் இந்த கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஓட்டுனரின் வசதிக்கேற்ப ஸ்டியரிங்கை சாயய்த்துக்கொள்ளவும், இருக்கையை உயர்த்திக் கொள்ளவும் வசதிகள் உள்ளன. இது தவிர, உயிர் காக்கும்காற்றுப் பைகள், உடனடியாக பிரேக் பிடிப்பதற்கு மிகப் பெரிய பிரேக் பூஸ்டர்உள்ளிட்ட வசதிகள் இந்த கார்களில் உள்ளன.நான்கு வகைகளில், ஆறு வண்ணங்களில் இந்த கார்கள் அறிமுகம் செயய்யப்பட்டுள்ளன.டீசல் இன்ஜின், மணிக்கு 4,000 ”ழற்சி வேகத்திலும், பெட்ரோல் இன்ஜின் மணிக்கு 6,000 ”ழற்சி வேகத்திலும் செயல்படக் கூடியவையாகும். பெட்ரோலில் இயங்கும் கார், லிட்டருக்கு 16.7 கி.மீ வரையிலும், டீசல் கார், லிட்டருக்கு 22.3 கி.மீ. வரையிலும் செல்லக் கூடியவை என, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.'டாட்டா விஸ்டா' பெட்ரோல் காரின் விலை, 3 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயய் (டெல்லி விலை) என்ற அளவிலும், டீசல் கார் 4 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|