பதிவு செய்த நாள்
07 செப்2011
00:21
கொச்சி:வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்(2012- 17), 4,000 கோடி ரூபாய்க்கு கயிறு பொருள்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, தற்போது, 800 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது என,மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்தின் செயலர் உதய்குமார் வர்மா தெரிவித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில், சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா, கொச்சியில் நடைபெற்றது. இதில், ஜனாதிபதிபிரதிபா பாட்டீல் கலந்து கொண்டு பேசியதாவது: நாட்டின் கயிறு பொருள்கள் துறை வாயிலாக, ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். குறிப்பாக இத்துறையில்,பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த கயிறு தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சர்வதேச தரம் கொண்ட கயிறு பொருள்களை உற்பத்தி செய்யும் வகையில், இத்துறையில் ஈடுபடுவோருக்கு சிறந்த பயிற்சி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதிபாபாட்டீல் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|