பதிவு செய்த நாள்
07 செப்2011
00:25
சென்னை:அமெரிக்காவைச் சேர்ந்த வெல்ச் ஆலின் நிறுவனம், மருத்துவ ஆய்வு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், விரைவான செயல்திறன் கொண்ட, 'சி.பி 50 இ.சி.ஜி.,' யையும், ரத்த அழுத்தத்தை டிஜிட்டல் முறையில் துல்லியமாக கணக்கிடும், 'கானெக்ஸ் ப்ரோ பீ.பி.,3,400' என்ற மருத்துவ சாதனத்தையும் இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்நிறுவனம், இப்புதிய சாதனங்களை, இந்தியாவில் சந்தைப்படுத்தும் வகையில், சென்னையைச் சேர்ந்த கருடா மெட் எக்யுப்மென்ட் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.இது குறித்து, வெல்ச் ஆலின் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (ஆசிய பசிபிக்) கான் ஹிக்கி கூறும் போது,' கண், காது, சுவாசம், இதயம், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகளை நவீனமான முறையில், விரைவாகவும், துல்லியமாகவும் கண்டறிவதற்கான பல்வேறு மருத்துவ ஆய்வு சாதனங்களை, நிறுவனம் வெளியிட்டு வருகிறது. சர்வதேச அளவில், நிறுவனம் தற்போது 70 கோடி டாலர் விற்று, முதலை கொண்டு இயங்கி வருகிறது. இதில், இந்தியாவின் பங்களிப்பு, 30 லட்சம் டாலராக உள்ளது. இதை இரட்டிப்பாக்கும் வகையில் செயல்படவுள்ளோம்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|